என்னைப் பிரியாது

காலைப் பகலவனும், காணும் நிலவொளியும்,
மாலை மலரழகும் மாறியதே - வாலையே
நின்றதெலாம் மாறும்! நிலையாக நீமட்டும்
என்னைப் பிரியா திரு!

பச்சையுடல் மாறியதே பால்மணமும் மாறியதே
உச்சிமுடி மாறி உயர்ந்ததுவே - கச்சனிந்த
மின்னே உலகெலாம் மீண்டுமீண்டு மாறினும்நீ
என்னைப் பிரியா திரு!

காலங்கள் மாறுதுவே காயங்கள் மாறுதுவே
ஜாலங்கள் கோடி சலிக்கிறதே - கோலமிது
என்றைக்கும் மாறுவதே ! என்றாலும் நீமட்டும்
என்னைப் பிரியா திரு!!

-விவேக்பாரதி

06.09.2017

Comments

Popular Posts