வாணியம்மா
காலை எழுந்ததும் வீட்டில் சியாமள தண்டகம் ஒலித்துக் கொண்டிருந்தது, இவள் தன்னை எனக்கு மட்டும் இப்படி வெளிப்படுத்திக் கொண்டாள்
உன்றனை வாழ்த்துகிறேன் - மிக
உயர்ந்தவளே கலைத் திருமகளே!
என்றனை வாழவைப்பாய் - என்னில்
ஏறி உலகத்தை நீரசிப்பாய்!
மன்றென நெஞ்சமைத்தேன் - நின்
மலர்ப்பதம் தாங்கிடக் கண்படைத்தேன்
நின்றெனைக் காத்திடம்மா - அடி
நித்ய சுமங்கலி வாணியம்மா!
ஊருக்குச் சேதிசொல்ல - நின
துண்மை இயலை எடுத்துச்சொல்ல
பாருக்கு நீதிசொல்ல - என்
பாட்டுக்குள் ஏறுக பாரதியே!
காருக்குக் காற்றுதவும் - மலர்
காட்சிக்குச் சூரியன் தானுதவும்
யாரெனக்கும் உதவ? - எழில்
யாழைப் படைத்தநல் வாணியம்மா!
சொல்லின் வனத்திடையே - எனைச்
சோதனை செய்திட விட்டவளே!
அல்லின் கனவிலெல்லாம் - பல
ஆனந்தப் பாட்டொடு தொட்டவளே!
கல்லின் உருவத்திலும் - பலக்
கவிதைகள் காட்டிக் கொடுத்தவளே!
இல்லை குறையெனக்கே - நின்
இணைமலர் பாதமென் இதயத்துளே!
வேத விளக்கங்களும், - பல
விற்பனர் செய்கவிப் புழக்கங்களும்,
நாத முழக்கங்களும், - உயர்
நல்லிசை பாடும் பழக்கங்களும்,
ஏதும் புரிந்தறியேன் - தமிழ்
எழுத்துக்கு வாழ்க்கைபட் டாடுகிறேன்!
சீதக் குளிர்மதியே - என்
சிந்தையில் ஏறிச் சிலிர்ப்பவளே!
நின்னைக் கதியெனவே - புகழ்
நித்தம் புகழ்ந்து மனத்தினுள்ளே
என்னைத் தொலைத்திடுவேன்! - அதில்
ஏறி வருமுன் எழிலுணர்வேன்!
மின்னை அணித்தமதி - ஒரு
மீட்டலில் தந்து மறைபவளே!
இன்னல் கெடுப்பவளே - அறி
விருட்டை விலக்கிய அற்புதமே!!
-விவேக்பாரதி
30.11.2017
உன்றனை வாழ்த்துகிறேன் - மிக
உயர்ந்தவளே கலைத் திருமகளே!
என்றனை வாழவைப்பாய் - என்னில்
ஏறி உலகத்தை நீரசிப்பாய்!
மன்றென நெஞ்சமைத்தேன் - நின்
மலர்ப்பதம் தாங்கிடக் கண்படைத்தேன்
நின்றெனைக் காத்திடம்மா - அடி
நித்ய சுமங்கலி வாணியம்மா!
ஊருக்குச் சேதிசொல்ல - நின
துண்மை இயலை எடுத்துச்சொல்ல
பாருக்கு நீதிசொல்ல - என்
பாட்டுக்குள் ஏறுக பாரதியே!
காருக்குக் காற்றுதவும் - மலர்
காட்சிக்குச் சூரியன் தானுதவும்
யாரெனக்கும் உதவ? - எழில்
யாழைப் படைத்தநல் வாணியம்மா!
சொல்லின் வனத்திடையே - எனைச்
சோதனை செய்திட விட்டவளே!
அல்லின் கனவிலெல்லாம் - பல
ஆனந்தப் பாட்டொடு தொட்டவளே!
கல்லின் உருவத்திலும் - பலக்
கவிதைகள் காட்டிக் கொடுத்தவளே!
இல்லை குறையெனக்கே - நின்
இணைமலர் பாதமென் இதயத்துளே!
வேத விளக்கங்களும், - பல
விற்பனர் செய்கவிப் புழக்கங்களும்,
நாத முழக்கங்களும், - உயர்
நல்லிசை பாடும் பழக்கங்களும்,
ஏதும் புரிந்தறியேன் - தமிழ்
எழுத்துக்கு வாழ்க்கைபட் டாடுகிறேன்!
சீதக் குளிர்மதியே - என்
சிந்தையில் ஏறிச் சிலிர்ப்பவளே!
நின்னைக் கதியெனவே - புகழ்
நித்தம் புகழ்ந்து மனத்தினுள்ளே
என்னைத் தொலைத்திடுவேன்! - அதில்
ஏறி வருமுன் எழிலுணர்வேன்!
மின்னை அணித்தமதி - ஒரு
மீட்டலில் தந்து மறைபவளே!
இன்னல் கெடுப்பவளே - அறி
விருட்டை விலக்கிய அற்புதமே!!
-விவேக்பாரதி
30.11.2017
Comments
Post a Comment