கடையக் கல்யாணி
பொன்னுரு வச்சிலைத் தேவீ - பதம்
மேவி - மனம் தூவித் - தொழும்
போகம் விரும்பிடும் ஆவி! - எழும்
பொல்லாத்துய ரில்லாக்கதி
நல்லார்க்குறும் வல்லாற்றல்கள்
போகம், - தவத் தேகம்
சென்றதை விட்டிடும் சிந்தை - புது
விந்தை - சுடர்ச் சந்தை - எனச்
சேரும் வியப்புகள் வேண்டும்! - தரும்
செல்வாக்கினி லெல்லார்க்கருள்
வல்லாக்கினி சொல்வாக்கினி
ராணி - கலி யாணி!
நின்றன் பதமலர் கண்டு - களி
கொண்டு - கவி விண்டு - வரும்
நினைப்பும் உண்மையில் வண்டு! - அது
நிலையாயுனை மலரேயென
நினைவேகொளும் உயர்வாய்த்துளும்
பண்டு! - பதி லுண்டு!
அன்புப் பராசக்தி தாயே - ஒளி
நீயே! - சுடர் வாயே! - எனும்
அர்த்தம் உணர்த்திவிட் டாயே! - புது
அறிவாலுனை நினைவோமினி
அழிவேயிலை உயர்வோமெம
தாயே! துணை நீயே!!
-விவேக்பாரதி
20.17.2017
Comments
Post a Comment