உள்ளப் பாடல்
நினைவே எரிக்காதே - நீ
நீரென நினைத்திருந்தேன்!
கனவே கரைக்காதே - நீ
கனலென நினைத்திருந்தேன்!
மனமே துடிக்காதே - உனை
மண்ணாய்க் கருதுகிறேன்!
வினையே அழுத்தாதே - உன்
விந்தையை நான் மறந்தேன்!
பொழுதே நெருக்காதே - நீ
போவாய் என நினைத்தேன்!
அழிவே விலகாதே - உன்மேல்
ஆசை கொண்டுவந்தேன்!
விழைவே நினைக்காதே - உனை
வீணெனக் கருதுகின்றேன்!
அழகே அழைக்காதே - நான்
அழிவதில் உறுதி கொண்டேன்!
மலரே சிரிக்காதே - உன்
மணம்போல் வாழ்வு கொண்டேன்!
சிலையே முறைக்காதே - நான்
சீக்கிரம் உனை அடைவேன்!
கலையே தடுக்காதே - நான்
கவிதையில் வாழ்கின்றேன்!
உலகே மறக்காதே - என்
உள்ளத்தைப் பாடுகிறேன்!!
-விவேக்பாரதி
17.08.2017
நீரென நினைத்திருந்தேன்!
கனவே கரைக்காதே - நீ
கனலென நினைத்திருந்தேன்!
மனமே துடிக்காதே - உனை
மண்ணாய்க் கருதுகிறேன்!
வினையே அழுத்தாதே - உன்
விந்தையை நான் மறந்தேன்!
பொழுதே நெருக்காதே - நீ
போவாய் என நினைத்தேன்!
அழிவே விலகாதே - உன்மேல்
ஆசை கொண்டுவந்தேன்!
விழைவே நினைக்காதே - உனை
வீணெனக் கருதுகின்றேன்!
அழகே அழைக்காதே - நான்
அழிவதில் உறுதி கொண்டேன்!
மலரே சிரிக்காதே - உன்
மணம்போல் வாழ்வு கொண்டேன்!
சிலையே முறைக்காதே - நான்
சீக்கிரம் உனை அடைவேன்!
கலையே தடுக்காதே - நான்
கவிதையில் வாழ்கின்றேன்!
உலகே மறக்காதே - என்
உள்ளத்தைப் பாடுகிறேன்!!
-விவேக்பாரதி
17.08.2017
Comments
Post a Comment