தமிழி
தமிழியெனில் தாரணியில் தானாய் வளர்ந்த
தமிழணங்குக் கின்னொரு பேர்!
அவளுக்குத் தமிழி எனப்பேர் - நம்
ஆவியில் இனிக்கும் தனிப்பேர்!
பவளக் கொடியென இடையாள் - செழும்
பாடல் புரண்டிடும் உடையாள்!
கவிதை, கட்டுரை, கதைகள் ,- கோடி
கற்பனை, அற்புத வகைகள்,
அவளது விலாச மாகும் - எழில்
அவளது சுபாவ மாகும்!
முன்னைப் புலவரின் வாயில் - தனி
முக்தியைக் கண்டவள்! பின்னாள்
மின்னை நிகர்த்துரு கொண்டு - பழி
மிரட்டி அடித்திட நின்றாள்!
அன்னை இளையவள் கண்டாய்! - அவள்
அகவை பழையது கண்டாய்!
என்றும் இனித்திடும் தமிழி - தன்னுள்
ஏழிசை காட்டிடும் குமரி!
ஏடுகள் ஆயிரம் கொண்டாள்! - புகழ்
தமிழணங்குக் கின்னொரு பேர்!
அவளுக்குத் தமிழி எனப்பேர் - நம்
ஆவியில் இனிக்கும் தனிப்பேர்!
பவளக் கொடியென இடையாள் - செழும்
பாடல் புரண்டிடும் உடையாள்!
கவிதை, கட்டுரை, கதைகள் ,- கோடி
கற்பனை, அற்புத வகைகள்,
அவளது விலாச மாகும் - எழில்
அவளது சுபாவ மாகும்!
முன்னைப் புலவரின் வாயில் - தனி
முக்தியைக் கண்டவள்! பின்னாள்
மின்னை நிகர்த்துரு கொண்டு - பழி
மிரட்டி அடித்திட நின்றாள்!
அன்னை இளையவள் கண்டாய்! - அவள்
அகவை பழையது கண்டாய்!
என்றும் இனித்திடும் தமிழி - தன்னுள்
ஏழிசை காட்டிடும் குமரி!
ஏடுகள் ஆயிரம் கொண்டாள்! - புகழ்
ஏற்றத்திலே யிவள் நின்றாள்!
பாடிடும் பாடலில் எல்லாம் - தன்
பளிங்குரு காட்டுவ மென்பாள்!
நாடுகள் போற்றிடும் நங்கை! - நம்
நாவினில் வாழ்ந்திடும் மங்கை!
கூடிடும் அமிழ்தென வந்தாள், - மனம்
குலவிட மாயமும் செய்வாள்!
அழகுடையவள் இத் தமிழி - புவி
அன்புறப் போற்றிடும் அழகி!
பழகுதற் கினியவள் தமிழி - நம்
பார்வைக்கெந் நாளும் குமரி!
மொழியிவள் உயிர்களின் நாதம்! - உரு
முழுமை பொருந்திய வேதம்!
வழியிவள் வாழ்வியற் கூறு! - மிக
வளமுடை யாளிம் மாது!
வாழிய தமிழியின் ஆற்றல் - மக்கள்
வாழிய தமிழியின் ஆற்றல் - மக்கள்
வாழ்த்துக தமிழியை நாளும்
வாழிய தமிழரின் பேச்சு - இவள்
வாழுக தமிழரின் பேச்சில்!
வாழிய தமிழியின் ஓசை - என்றும்
வாழிய தமிழியின் பூசை!
வாழிய வாழிய தமிழி - அருள்
வண்ணக் களஞ்சியக் குமரி!!
-விவேக்பாரதி
-விவேக்பாரதி
18.12.2017
Comments
Post a Comment