ஐயப்பனே ஆதரவு
சபரி அருட்கிரி வாசனை எண்ணிடச்
சஞ்சலம் தங்கிடுமோ? - மனமே
அபய மென்றவன் ஆசைப் பெயர்சொல
அச்சம் நெருங்கிடுமோ?
அபய மென்றவன் ஆசைப் பெயர்சொல
அச்சம் நெருங்கிடுமோ?
பாவரின் தோஅனைப் பந்தள ராசனைப்
பார்வையிற் கொண்டுவிட்டால் - ஒரு
தாபம் நெருங்குமோ? தர்க்கம் நிகழுமோ
தைரியங் கொள் மனமே!
பார்வையிற் கொண்டுவிட்டால் - ஒரு
தாபம் நெருங்குமோ? தர்க்கம் நிகழுமோ
தைரியங் கொள் மனமே!
மணிகண்ட ரூபனை மகிஷிசம் ஹாரனை
மதியில் வைத்துவிட்டால் - பொய்ப்
பிணிகளும் அண்டுமோ? பிழைவரக் கூடுமோ?
பிழைத்திடுவாய் மனமே!
மதியில் வைத்துவிட்டால் - பொய்ப்
பிணிகளும் அண்டுமோ? பிழைவரக் கூடுமோ?
பிழைத்திடுவாய் மனமே!
வன்புலி வாகனன் வனத்தில் வசிப்பவன்
வழியைத் தொடர்ந்துவிட்டால் - உன்னில்
வன்மை பெருகிடும் வாழ்வு சிறந்திடும்
வழிபடுவாய் மனமே!
வழியைத் தொடர்ந்துவிட்டால் - உன்னில்
வன்மை பெருகிடும் வாழ்வு சிறந்திடும்
வழிபடுவாய் மனமே!
ஐயப்ப தேவனே ஆதரவானவன்
அண்டிடுவாய் மனமே - இனி
ஐயங்கள் இல்லை துயரில்லை சன்னிதி
ஆனந்தமே தினமே!!
அண்டிடுவாய் மனமே - இனி
ஐயங்கள் இல்லை துயரில்லை சன்னிதி
ஆனந்தமே தினமே!!
-விவேக்பாரதி
21.12.2017
21.12.2017
Comments
Post a Comment