நடிப்புச் சான்றோர்கள்
உண்மை நிலையென்று சொல்லவந்தார் - எது
உண்மை எனுங்கதை யாரறிவார்?
பெண்மை உயர்வெனப் பேசவந்தார் - அவர்
பெண்ணின் துயர்கள் அறிந்தாரோ?
கண்ணை மூடிக்கொண்டு வாழ்ந்திடுவார் - பிறர்
கருத்தை ஒருபோதும் சிந்தைசெய்யார்
பண்டு நிகழ்ந்தவப் பழங்கதையே - மிகப்
பவித்திரம் என்றிவர் சொல்லிவைப்பார்!!
சாத்திர மென்னும் நதியின்மிசை - சிலச்
சாக்கடைக் குப்பைகள் சேர்த்துவைத்தே
மாத்திரை போல அதைவிழுங்கிச் - சிலர்
மண்மிசை வாழ்க்கை நடத்திடுவார்!
சாத்திரம் என்ப தெவரறிந்தார்? - அதன்
சாரத்தின் உண்மை அறிந்தாரோ?
சாத்திரம் வாழும் வழிமுறையாம் - இச்
சங்கதி யேனும் அறிவாரோ?
பின்னும் புதுமைகள் பேசிடுவார் - அதில்
பீழை இருப்பதைக் கண்டுகொள்ளார்!
எண்ணும் படிக்கிங்கு யாவருமே, - மேல்
ஏறிப் பலகதை தானுரைப்பார்!
தன்னை நிறுத்திட எண்ணிடுவார் - மெய்த்
தன்மை தனையெண்ணும் சிந்தையிலார்
என்றும் புகழொலி ஓதிடுவார் - அவர்
ஏத்திக் கிருத்திகள் பாடிடுவார்!
சேரும் பயனொன்றில் சிந்தனையாய் - விசை
சேர்க்கும் முயற்சியில் நின்றிடுவார்
தீரும் பயனெனில் நிச்சயமாய்த் - தன்
திறனை ஒளிக்க தயக்கமிலார்
நேரத்திற் கேற்ற நெளிவுடனே - தினம்
நல்லுப சாரம் நிகழ்த்திடுவார்
யாருக்கு மேதலை சாய்த்திடுவார்! - கரும்
யாம நிறத்தில் உளம்படைத்தார்!
கற்றது நான்கு கதையெனினும் - நன்கு
காதினில் பூக்களைச் சுற்றிநிற்பார்
பெற்றவை யாவும் செலவழித்தும் - புகழ்
பெற்றிட எண்ணம் இயற்றிநிற்பார்!
மற்றவர்க் காக உதவியென்றால் - கொடும்
மணியை நேரத்தைக் காட்டிக்கொண்டே
வெற்றுப் பொய்களைச் சொல்லிடுவார் - இவர்
வெல்லும் நடிப்புச் சான்றோர்களே!!
-விவேக்பாரதி
02.12.2017
உண்மை எனுங்கதை யாரறிவார்?
பெண்மை உயர்வெனப் பேசவந்தார் - அவர்
பெண்ணின் துயர்கள் அறிந்தாரோ?
கண்ணை மூடிக்கொண்டு வாழ்ந்திடுவார் - பிறர்
கருத்தை ஒருபோதும் சிந்தைசெய்யார்
பண்டு நிகழ்ந்தவப் பழங்கதையே - மிகப்
பவித்திரம் என்றிவர் சொல்லிவைப்பார்!!
சாத்திர மென்னும் நதியின்மிசை - சிலச்
சாக்கடைக் குப்பைகள் சேர்த்துவைத்தே
மாத்திரை போல அதைவிழுங்கிச் - சிலர்
மண்மிசை வாழ்க்கை நடத்திடுவார்!
சாத்திரம் என்ப தெவரறிந்தார்? - அதன்
சாரத்தின் உண்மை அறிந்தாரோ?
சாத்திரம் வாழும் வழிமுறையாம் - இச்
சங்கதி யேனும் அறிவாரோ?
பின்னும் புதுமைகள் பேசிடுவார் - அதில்
பீழை இருப்பதைக் கண்டுகொள்ளார்!
எண்ணும் படிக்கிங்கு யாவருமே, - மேல்
ஏறிப் பலகதை தானுரைப்பார்!
தன்னை நிறுத்திட எண்ணிடுவார் - மெய்த்
தன்மை தனையெண்ணும் சிந்தையிலார்
என்றும் புகழொலி ஓதிடுவார் - அவர்
ஏத்திக் கிருத்திகள் பாடிடுவார்!
சேரும் பயனொன்றில் சிந்தனையாய் - விசை
சேர்க்கும் முயற்சியில் நின்றிடுவார்
தீரும் பயனெனில் நிச்சயமாய்த் - தன்
திறனை ஒளிக்க தயக்கமிலார்
நேரத்திற் கேற்ற நெளிவுடனே - தினம்
நல்லுப சாரம் நிகழ்த்திடுவார்
யாருக்கு மேதலை சாய்த்திடுவார்! - கரும்
யாம நிறத்தில் உளம்படைத்தார்!
கற்றது நான்கு கதையெனினும் - நன்கு
காதினில் பூக்களைச் சுற்றிநிற்பார்
பெற்றவை யாவும் செலவழித்தும் - புகழ்
பெற்றிட எண்ணம் இயற்றிநிற்பார்!
மற்றவர்க் காக உதவியென்றால் - கொடும்
மணியை நேரத்தைக் காட்டிக்கொண்டே
வெற்றுப் பொய்களைச் சொல்லிடுவார் - இவர்
வெல்லும் நடிப்புச் சான்றோர்களே!!
-விவேக்பாரதி
02.12.2017
Comments
Post a Comment