நண்பரே!


நாமெ னச்சொலும் நன்மையைக் காட்டிடும்,
பூம ணம்புரை புன்னகை தூவிடும்,
ஏமம் நல்கவே ஏற்றவன் தந்ததாம்
காமம் கண்டிடாக் கண்ணிய நட்பதே!

வாழ்வில் செம்மையும், வன்மையும், நேசமும்,
தாழ்வில் தோள்களும், தாண்டிடப் பாதையும்,
ஆழ்ந்து தந்திடும் அன்புடை நண்பரைச்
சூழ்ந்து வாழ்பவன் சொர்க்கமும் காண்பனே!
 
*
ஏற்றமே சொல்லுவார் என்றும் வாழ்விலே !
தோற்றிடும் போழ்திலும் தோளில் தாங்குவார் !
ஊற்றென யின்புறு முண்மை வேளையும்,
சீற்றமா யின்பமே சிந்துவர் நண்பரே!
 
-விவேக்பாரதி 
31.08.2017

Comments

Popular Posts