இல்லை
பாட்டுக்குள் பேதம் இல்லை
பனித்துளியில் களங்கம் இல்லை
காட்டுக்குள் இரைச்சல் இல்லை
கவிதைக்குள் அநர்த்தம் இல்லை
வீட்டுக்குள் பகைமை இல்லை
வீதிக்குள் பிரிவும் இல்லை
நாட்டுக்குள் நேர்மை இல்லை
நடுக்கத்தில் உண்மை இல்லை!!
இன்பத்தில் நிலைமை இல்லை
இடர் நிரந்தரமும் இல்லை
அன்புக்குள் மாசும் இல்லை
ஆகுங்கால் அன்பே இல்லை
சென்றவைகள் திரும்பவில்லை
திரும்பிவர வழியும் இல்லை
ஒன்றுண்டு ஞானம்! அந்த
உயர்வன்றி உயர்வே இல்லை!!
-விவேக்பாரதி
09.11.2017
பனித்துளியில் களங்கம் இல்லை
காட்டுக்குள் இரைச்சல் இல்லை
கவிதைக்குள் அநர்த்தம் இல்லை
வீட்டுக்குள் பகைமை இல்லை
வீதிக்குள் பிரிவும் இல்லை
நாட்டுக்குள் நேர்மை இல்லை
நடுக்கத்தில் உண்மை இல்லை!!
இன்பத்தில் நிலைமை இல்லை
இடர் நிரந்தரமும் இல்லை
அன்புக்குள் மாசும் இல்லை
ஆகுங்கால் அன்பே இல்லை
சென்றவைகள் திரும்பவில்லை
திரும்பிவர வழியும் இல்லை
ஒன்றுண்டு ஞானம்! அந்த
உயர்வன்றி உயர்வே இல்லை!!
-விவேக்பாரதி
09.11.2017
Comments
Post a Comment