மகாசக்திக்குப் பிரார்த்தனை
அம்பிகே சிவசக்தி - எனை
ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
அம்படி நானுனக்கு! - எனை
ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
நம்பினேன் உள்ளவரை - அவர்
நாளெலாம் நடித்திடக் காணுகையில்
வெம்பினேன் மனதுக்குள்ளே - இந்த
வேதனை மாய்ந்திட வழியிலையோ?
உள்ளமாம் அகழியிலே - நான்
உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
தெள்ளிய ஞானமெனும் - ஒளித்
தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
பள்ளெலாம் உன்புகழ்தான் - என்
பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
துள்ளும்வேல் கொடுத்தெனையும் - தொடும்
துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!
பற்றிலா வாழ்வுகொடு - இப்
பாரினைப் பாடிடும் வலிமைகொடு
ஒற்றிலா நெஞ்சுகொடு - உன்
ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
முற்றிலா இன்பம்கொடு - சுக
முக்தியிலே எனை மூழ்கவிடு!
கற்றிலேன்! கல்விகொடு! - புவிக்
கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!
உன்னொளிக் கிரணத்திலே - பல
உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
அன்னையே உன்மடிமேல் - என்
ஆவி அமர்ந்திடச் செய்பவளே
என்னையே தந்துவிட்டேன் - இங்கு
என்செயல் யாவையும் நின்செயலே
இந்நில வாழ்வினிலே - யான்
இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!
அம்பிகே சிவசக்தி!!
-விவேக்பாரதி
23.11.2017
ஆட்டுவிக்கும் காலம் எத்தனையோ?
அம்படி நானுனக்கு! - எனை
ஆற்றலோ டேவிடும் வில்லடிநீ!!
நம்பினேன் உள்ளவரை - அவர்
நாளெலாம் நடித்திடக் காணுகையில்
வெம்பினேன் மனதுக்குள்ளே - இந்த
வேதனை மாய்ந்திட வழியிலையோ?
உள்ளமாம் அகழியிலே - நான்
உள்ளொரு முதலைபோல் உழன்றிடவே
தெள்ளிய ஞானமெனும் - ஒளித்
தேரெனைக் கூப்பிடும் நாள்வருமோ?
பள்ளெலாம் உன்புகழ்தான் - என்
பாட்டெலாம் கூத்தெலாம் உன்பெயர்தான்
துள்ளும்வேல் கொடுத்தெனையும் - தொடும்
துக்கமும் நீங்கிடத் துணைபுரியே!!
பற்றிலா வாழ்வுகொடு - இப்
பாரினைப் பாடிடும் வலிமைகொடு
ஒற்றிலா நெஞ்சுகொடு - உன்
ஓங்கார ஓசையின் சந்தம்கொடு
முற்றிலா இன்பம்கொடு - சுக
முக்தியிலே எனை மூழ்கவிடு!
கற்றிலேன்! கல்விகொடு! - புவிக்
கயமையைப் போக்கிடும் கணையைக்கொடு!!
உன்னொளிக் கிரணத்திலே - பல
உவகைகண் டேன்மிக உணர்ச்சிகொண்டேன்
அன்னையே உன்மடிமேல் - என்
ஆவி அமர்ந்திடச் செய்பவளே
என்னையே தந்துவிட்டேன் - இங்கு
என்செயல் யாவையும் நின்செயலே
இந்நில வாழ்வினிலே - யான்
இயற்றுவ தெக்கடன்? சொல்லடியே!!
அம்பிகே சிவசக்தி!!
-விவேக்பாரதி
23.11.2017
Comments
Post a Comment