கவிமலர்
இழையோடிப் போகும் மின்னலுக் குள்ளே
ஈரச் சலனங்கள் - ஒளிர்
இதயக் கிரணங்கள்,
மழையோடு கின்ற முகில்களுக் குள்ளே
மனதின் பயணங்கள் - அவை
மாயப் புவனங்கள்!
அழைக்காமல் வந்து சேர்கின்ற ஆசை
ஆட்டம் பாட்டங்கள் - சில
அழிவுக் கீட்டங்கள்!
கழையோடு ராகம் கவிபாடக் கேட்கும்
கன்னித் தோற்றங்கள்! - எழில்
கவிதை ஏற்றங்கள்!
சரியாத கூந்தல் சரியான நெற்றி
சலசலக்கும் இளமை - அவள்
சடையசைக்கும் வளமை
புரியாத நாணம் புதிரான கண்கள்
புத்தி மயக்கங்கள் - வெறும்
பூழ்தி இயக்கங்கள்!
அரிதார மற்ற அவதாரப் பெண்மை
அகத்தில் மின்னல்கள் - தர
அகலும் இன்னல்கள்
மரியாத இன்ப மருந்தாகும் கவிதை
மண்ணில் சொர்க்கங்கள்! - நம்
மதியின் சிற்பங்கள்!
சிலவந்து போக சிலநின்று சாக
சில்லரை வார்த்தைகள் - தரும்
சிலிர்ப்பு போதைகள்
பலவந்த மாக மார்மீது பாயும்
பகலின் கிரணங்கள் - அதில்
பாடல் உதயங்கள்!
நிலவந்த விண்ணின் நிழலென்று சொல்லி
நிலவும் தர்க்கங்கள் - அதில்
நிகழ்த்தும் யுத்தங்கள்!
மலரென்று பூத்து மலையென்று மாறும்
மந்திர ஜாலங்கள் - கவி
மலர்வதன் கோலங்கள்!!
-விவேக்பாரதி
28.11.2017
ஈரச் சலனங்கள் - ஒளிர்
இதயக் கிரணங்கள்,
மழையோடு கின்ற முகில்களுக் குள்ளே
மனதின் பயணங்கள் - அவை
மாயப் புவனங்கள்!
அழைக்காமல் வந்து சேர்கின்ற ஆசை
ஆட்டம் பாட்டங்கள் - சில
அழிவுக் கீட்டங்கள்!
கழையோடு ராகம் கவிபாடக் கேட்கும்
கன்னித் தோற்றங்கள்! - எழில்
கவிதை ஏற்றங்கள்!
சரியாத கூந்தல் சரியான நெற்றி
சலசலக்கும் இளமை - அவள்
சடையசைக்கும் வளமை
புரியாத நாணம் புதிரான கண்கள்
புத்தி மயக்கங்கள் - வெறும்
பூழ்தி இயக்கங்கள்!
அரிதார மற்ற அவதாரப் பெண்மை
அகத்தில் மின்னல்கள் - தர
அகலும் இன்னல்கள்
மரியாத இன்ப மருந்தாகும் கவிதை
மண்ணில் சொர்க்கங்கள்! - நம்
மதியின் சிற்பங்கள்!
சிலவந்து போக சிலநின்று சாக
சில்லரை வார்த்தைகள் - தரும்
சிலிர்ப்பு போதைகள்
பலவந்த மாக மார்மீது பாயும்
பகலின் கிரணங்கள் - அதில்
பாடல் உதயங்கள்!
நிலவந்த விண்ணின் நிழலென்று சொல்லி
நிலவும் தர்க்கங்கள் - அதில்
நிகழ்த்தும் யுத்தங்கள்!
மலரென்று பூத்து மலையென்று மாறும்
மந்திர ஜாலங்கள் - கவி
மலர்வதன் கோலங்கள்!!
-விவேக்பாரதி
28.11.2017
Comments
Post a Comment