அவள் சக்தி
ஓமென்றேன்
அவள் நானென்றாள்
சேர்ந்து களிப்
போமென்றேன்
அவள் போவென்றாள்
தெய்வ ஜோதி
நாமென்றேன்
அவள் ஆமென்றாள்
ஆடும் ஈசன்
வாமத்தில்
நடு ஜாமத்தில்
நடிக்கும் தேவி!
அறிவென்றேன்
அவள் பொறியென்றாள்
ஆழ்ந்த ஞானச்
செறிவென்றேன்
அவள் திசைகள் காட்டிச்
சருகென்றாள்
நித்ய வீர நெறியென்றேன்
அவள் நமதென்றாள்
நிமிரும் நெஞ்சக்
குறியென்றேன்
தலை கோதி
அருட்புனல் குதித்திட்டாளே!
அவளுக்கே
என் மனமென்றேன்
அவள் ஆகா தென்றாள்
துவளும் போதவள்
துணையென்றேன்
அவள் தூக்கி அணைத்துப்
பவளத்தேன் இதழ்
முத்தந்தந்து முகிழ்ந்து பூத்துக்
கவிதைத் தேர்மிசை
அமர்த்திக் கொண்டெனை
ஆள்கின்றாளே!!
-விவேக்பாரதி
24.12.2017
Comments
Post a Comment