மெழுகு

அவர் எரியுறு மெழுகானார்!
அந்த இராமனது திட்பத்தை
ஜானகியின் வெப்பத்தைப்
புரிந்துகொள்ள முடியாத
கங்கைக் கரை முனிவர்கள்
எரியுறு மெழுகானார்!!
அந்தக் கண்ணகி முழங்கிய
சத்தத்தை
அதில் கலங்கிய அரசின்
சித்தத்தைக்
கண்ணால் கண்ட மாந்தர் யாவரும்
எரியுறு மெழுகானார்!!
ஜோதி வடிவான ஞானம்
சுடர் கொண்டு நம்
தீப நெஞ்சுக்குள் ஜ்வாலை பூக்க
அற்பப் புறத்தைத் தேடி அலையும்
விட்டில் பூச்சிகளான நம் மனம்
எரியுறு மெழுகாவது போல
அவர்களும் எரியுறு மெழுகானார்!!

-விவேக்பாரதி
06.11.2017

Comments

Popular Posts