கல்யாணி உமையே
அடியவர்க் கன்றோ உத்தரவு - நானுன்
ஆசை மகனல்லவோ! - என்றனை
அழைப்பதும் நீயல்லவோ!
குடியிருக் கின்ற நெஞ்சிடையே - நின்
கொலுமிக எழிலல்லவோ! - எனிலுமுன்
கோயில் அழகல்லவோ!
கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!
பாடிடும் பாலன் தாமரைக் கழலில்
பணிந்திடும் நாள் வருமோ? - என்
பழவினை மாயப் பவவினை தீரப்
பளிச்சிடும் நாள் வருமோ?
கூடிடும் நின்றன் ஜோதியில் ஜ்வாலை
குலவிடும் நாள் வருமோ? - அடி
குங்குமக் காரி மங்களத் தேரில்
குடிபுகும் நாள் வருமோ?
வீதியில் வீசும் தென்றலைக் கேட்டேன்
விந்தைகள் நீயென்றது! - பல
வீணைகள் செய்திடும் ஓசையைக் கேட்டேன்
வித்தையும் நீயென்றது!
ஆதியைக் கேட்டேன் அந்தந்தைக் கேட்டேன்
அது கடந்தாள்பவளே - எனை
அணைத்திடும் காலம் நின்றனைக் கேட்பேன்
அதையுடன் சொல்லுகவே!
நான்வரும் நேரம் தாயெது செய்வாய்
நல்லிதழ் விரிப்பாயோ ? - என்
நடிப்புகள் தீர நாடகம் சேர
நயனம் திறப்பாயோ?
வான்தரும் மாரி வருவதைக் கண்டால்
வனமயில் ஆடாதோ? - நின்
வனப்பினைக் காண வாய்திறந் தாவி
வாழ்த்தினைப் பாடாதோ!!
அம்மா!
கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!
-விவேக்பாரதி
02.12.2017
பாடல் : கவிமாமாணி க ரவி
ஆசை மகனல்லவோ! - என்றனை
அழைப்பதும் நீயல்லவோ!
குடியிருக் கின்ற நெஞ்சிடையே - நின்
கொலுமிக எழிலல்லவோ! - எனிலுமுன்
கோயில் அழகல்லவோ!
கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!
பாடிடும் பாலன் தாமரைக் கழலில்
பணிந்திடும் நாள் வருமோ? - என்
பழவினை மாயப் பவவினை தீரப்
பளிச்சிடும் நாள் வருமோ?
கூடிடும் நின்றன் ஜோதியில் ஜ்வாலை
குலவிடும் நாள் வருமோ? - அடி
குங்குமக் காரி மங்களத் தேரில்
குடிபுகும் நாள் வருமோ?
வீதியில் வீசும் தென்றலைக் கேட்டேன்
விந்தைகள் நீயென்றது! - பல
வீணைகள் செய்திடும் ஓசையைக் கேட்டேன்
வித்தையும் நீயென்றது!
ஆதியைக் கேட்டேன் அந்தந்தைக் கேட்டேன்
அது கடந்தாள்பவளே - எனை
அணைத்திடும் காலம் நின்றனைக் கேட்பேன்
அதையுடன் சொல்லுகவே!
நான்வரும் நேரம் தாயெது செய்வாய்
நல்லிதழ் விரிப்பாயோ ? - என்
நடிப்புகள் தீர நாடகம் சேர
நயனம் திறப்பாயோ?
வான்தரும் மாரி வருவதைக் கண்டால்
வனமயில் ஆடாதோ? - நின்
வனப்பினைக் காண வாய்திறந் தாவி
வாழ்த்தினைப் பாடாதோ!!
அம்மா!
கல்யாணி உமையே! மகன்
காண வேண்டும் உனையே!!
-விவேக்பாரதி
02.12.2017
பாடல் : கவிமாமாணி க ரவி
Comments
Post a Comment