சக்தி தாயே

சக்திபதம் போற்றிடுவாய் நீயே - நமைச்
   சாந்தமுடன் காத்திடுவாள் தாயே !
மக்கள்மனம் மிக்கும்பிழைத் தீயே - அவள்
   மலர்பதத்தில் தணியும்காண் பாயே !
பக்கபலம் ஆகுவதும் தாயே - வரும்
   பணிகளையும் உவந்தேஏற் பாயே
பக்தியினால் கனியாகும் காயே ! - வரும்
   பயமனைத்துந் தீர்ந்திடக்காண் பாயே !

-விவேக்பாரதி
25.09.2015

Comments

Popular Posts