உண்மை சொல்லினால்.....

உண்மை சொல்லினால் உரக்கச் சொல்லினால்
மண்ணுல கத்திலே மாபெரும் சக்தியும்
அண்டி வாருமே அகிம்சை வெல்லுமே !

நன்மை செய்திட நாணுவார் வந்திடும்
பின்விளை வெண்ணிப் பிதற்றுவார் உண்மையில்
அன்பு வெல்லுமே அகிம்சை வெல்லுமே !

எத்தனை காலம் ஏமாற்றம் நேருமோ
புத்துயிர் தந்துநம் பூமி காத்திட
அத்தனை சக்திதந் தகிம்சை வெல்லுமே !


-விவேக்பாரதி

02.10.2015

Comments

Popular Posts