உழைப்பாளி
சாலைகள் செய்தருஞ் சோலைக ளாக்கியே
சாதித்த தாருடைக்கை ? - எங்கும்
ஆலைகள் தோறுமே வேலைகள் செய்திடும்
அன்புடைத் தோழரின்கை !
பூமிமு ழுவதும் பூரண மாகிடப்
புழுங்கிய தாருடைத்தோள் ? - அந்தச்
சாமிம தித்திடும் எந்தொழி லாளரின்
சாவைம றந்திட்டதோள் !
வண்ணச்செ ழுமைகள் செய்திங்கு நன்னிலம்
வார்த்தது மார்மதியோ ? - தங்கள்
எண்ணஞ்சி றந்திட என்றுமு ழைத்திடும்
எம்முழைப் பாளிமதி !
உண்டிடச் சோறுமு டுக்கவு டைகளும்
ஊரிற்கொ டுப்பதுமார் ? - நன்கு
மண்ணைப்ப தஞ்செய்து மாபெரு மேருழும்
மனிதரு ழவரன்றோ !
கண்ணிற்கி னியவாம் கட்டிட மாமலை
காட்சிக்க மைத்ததுமார் - நல்ல
வண்ணமி ழைத்ததில் வார்த்தெழில் கூட்டிடும்
வன்மைக்க லைஞரன்றோ !
இங்கேயு ழைத்திடும் வர்க்கமு மில்லையேல்
இன்னுல குண்டாமோ ? - வாழத்
தங்களு ழைப்பினைத் தந்திடு வோரின்றித்
தாரணி உண்டாமோ ?
என்றுமு ழைப்பவர் கையைப்பி டித்தவர்க்
கேற்றத்தைக் காட்டிடுவோம் - பின்னர்
அன்னவ ரின்றியிங் கெஃதுமில் லையென
அன்புடன் சொல்லிடுவோம் !
தன்னைம றந்துநம் வாழ்வினுக் காகாவே
தானுமு ழைப்பவரை - மண்ணில்
மன்னர்க ளென்றுநாம் நல்லுரை செய்திடில்
மாதவ மெய்துவமே !
-விவேக்பாரதி
24.04.2016
சாதித்த தாருடைக்கை ? - எங்கும்
ஆலைகள் தோறுமே வேலைகள் செய்திடும்
அன்புடைத் தோழரின்கை !
பூமிமு ழுவதும் பூரண மாகிடப்
புழுங்கிய தாருடைத்தோள் ? - அந்தச்
சாமிம தித்திடும் எந்தொழி லாளரின்
சாவைம றந்திட்டதோள் !
வண்ணச்செ ழுமைகள் செய்திங்கு நன்னிலம்
வார்த்தது மார்மதியோ ? - தங்கள்
எண்ணஞ்சி றந்திட என்றுமு ழைத்திடும்
எம்முழைப் பாளிமதி !
உண்டிடச் சோறுமு டுக்கவு டைகளும்
ஊரிற்கொ டுப்பதுமார் ? - நன்கு
மண்ணைப்ப தஞ்செய்து மாபெரு மேருழும்
மனிதரு ழவரன்றோ !
கண்ணிற்கி னியவாம் கட்டிட மாமலை
காட்சிக்க மைத்ததுமார் - நல்ல
வண்ணமி ழைத்ததில் வார்த்தெழில் கூட்டிடும்
வன்மைக்க லைஞரன்றோ !
இங்கேயு ழைத்திடும் வர்க்கமு மில்லையேல்
இன்னுல குண்டாமோ ? - வாழத்
தங்களு ழைப்பினைத் தந்திடு வோரின்றித்
தாரணி உண்டாமோ ?
என்றுமு ழைப்பவர் கையைப்பி டித்தவர்க்
கேற்றத்தைக் காட்டிடுவோம் - பின்னர்
அன்னவ ரின்றியிங் கெஃதுமில் லையென
அன்புடன் சொல்லிடுவோம் !
தன்னைம றந்துநம் வாழ்வினுக் காகாவே
தானுமு ழைப்பவரை - மண்ணில்
மன்னர்க ளென்றுநாம் நல்லுரை செய்திடில்
மாதவ மெய்துவமே !
-விவேக்பாரதி
24.04.2016
Comments
Post a Comment