கோடை மழை
கொட்டித் தீர்க்குது கோரமழை - பலே
கொட்ட மடிக்குது கோபஇடி - அட
வெட்டித் தெறிக்குது மின்னலொளி - முகில்
சுற்றி வளைக்குது அக்கினியை !
எட்டிப் பார்க்கவும் இயலாது - பகல்
ஏந்திழை அந்தோ மறைகின்றாள் - எழில்
குட்டிக் கரணம் போட்டபடி - உளே
குளிர்ந்த காற்றும் நிறைகின்றாள் !
வெய்யோன் உண்டு வேனிலிலை - வரும்
வேகக் காற்றில் வேப்பமிலை - இரு
கையும் விசிறிகள் தேடவிலை - மின்
காற்றும் அறையுள் ஓடவில்லை !
அக்கினி வெயிலும் என்னாச்சு ? - அது
அடைமழை யாலே நின்னாச்சு - இருள்
பக்க மனைத்திலும் சூழ்ந்தாச்சு - கிளைப்
பறவைகள் துயிலில் ஆழ்ந்தாச்சு !
சூட்டில் வியர்த்தது பின்னோடிக் - குளுங்
காற்றில் வியர்குது மேனியடா ! - மழைக்
காட்டில் உறைந்திடும் ஊர்போலே - சுடும்
கந்தக பூமியு மானதடா !
அடஅட அடைமழை பெய்கிறதே - மனம்
ஆனந் தத்தில் உய்கிறதே - உடன்
கடகட கடவென மண்வாசம் - நிறைந்
தாடுது என்றன் பண்வாசம் !
திக்குகள் எட்டிலும் மேகங்களாய் - பல
தவளைச் சத்தமும் ராகங்களாய் - புவி
மக்களும் மண்ணில் மகிழ்ந்திடவே - துளி
முகிலதை விட்டு முகிழ்கிறதே !
கவிதை : https://soundcloud.com/vivekbharathi/audio3
-விவேக்பாரதி
16.05.2015
கொட்ட மடிக்குது கோபஇடி - அட
வெட்டித் தெறிக்குது மின்னலொளி - முகில்
சுற்றி வளைக்குது அக்கினியை !
எட்டிப் பார்க்கவும் இயலாது - பகல்
ஏந்திழை அந்தோ மறைகின்றாள் - எழில்
குட்டிக் கரணம் போட்டபடி - உளே
குளிர்ந்த காற்றும் நிறைகின்றாள் !
வெய்யோன் உண்டு வேனிலிலை - வரும்
வேகக் காற்றில் வேப்பமிலை - இரு
கையும் விசிறிகள் தேடவிலை - மின்
காற்றும் அறையுள் ஓடவில்லை !
அக்கினி வெயிலும் என்னாச்சு ? - அது
அடைமழை யாலே நின்னாச்சு - இருள்
பக்க மனைத்திலும் சூழ்ந்தாச்சு - கிளைப்
பறவைகள் துயிலில் ஆழ்ந்தாச்சு !
சூட்டில் வியர்த்தது பின்னோடிக் - குளுங்
காற்றில் வியர்குது மேனியடா ! - மழைக்
காட்டில் உறைந்திடும் ஊர்போலே - சுடும்
கந்தக பூமியு மானதடா !
அடஅட அடைமழை பெய்கிறதே - மனம்
ஆனந் தத்தில் உய்கிறதே - உடன்
கடகட கடவென மண்வாசம் - நிறைந்
தாடுது என்றன் பண்வாசம் !
திக்குகள் எட்டிலும் மேகங்களாய் - பல
தவளைச் சத்தமும் ராகங்களாய் - புவி
மக்களும் மண்ணில் மகிழ்ந்திடவே - துளி
முகிலதை விட்டு முகிழ்கிறதே !
கவிதை : https://soundcloud.com/vivekbharathi/audio3
-விவேக்பாரதி
16.05.2015