சக்தி வேல்
எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும்
என்வாழ்வு மிங்கே எழிலாகும்
பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி
என்வாழ்வைச் சேரும் அருளாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை
கொண்டாயே தாயே உமையாளே
உன்னாசி அன்றி வேறெந்த ஜோதி
என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம்
என்னோடு நல்கு தமிழாறை
முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும்
பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே
தந்தாயே வேலை அதுபோலே
உன்சேயா மென்றன் கையோடு நீயும்
தந்தாலே போதும் கவிவேலை !
-விவேக்பாரதி
02.05.2015
என்வாழ்வு மிங்கே எழிலாகும்
பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி
என்வாழ்வைச் சேரும் அருளாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை
கொண்டாயே தாயே உமையாளே
உன்னாசி அன்றி வேறெந்த ஜோதி
என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம்
என்னோடு நல்கு தமிழாறை
முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும்
பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே
தந்தாயே வேலை அதுபோலே
உன்சேயா மென்றன் கையோடு நீயும்
தந்தாலே போதும் கவிவேலை !
-விவேக்பாரதி
02.05.2015
Comments
Post a Comment