விருத்த மாலை
காப்பு:
ஆசானைப் போற்றி அரும்பாக்கள் சொல்கின்றேன்
மாசாகி டாமல் மகேசனும் காக்கவே !
நூல் :
(வெளிவிருத்தம்)
ஆசிரியர்கள் அறிவின் தேக்கம் எனச்சொல்வாய் - அவர்தாளில்
மாசிலா நல்மணியாய் மனதைப் பொழிந்திடுவாய் - அவர்தாளில்
கூசிடாத சுடரொளியாம் குணத்தைப் பெற்றிடுவாய் - அவர்தாளில்
பேசிடாது விழுந்து பணிவாய் உயர்வுருவாய் - அவர்தாளில் !
(ஆசிரிய விருத்தம்)
அவரது தாளில் நீயும்
அன்பெனும் பூவைக் கொட்டித்
தவறுகள் களைய வேண்டித்
தவங்களைப் புரிவாய் நாளும் !
புவனமும் புண்ய மெய்தப்
புதுப்புதுக் கலைகள் கற்று
நவநனி நாக ரீகம்
நல்குபவர் ஆசான் மாரே !
(கலி விருத்தம்)
மாரி லேநமை வைத்தெழில் கல்வியின்
வேரி னையரும் பாலென ஊட்டியே
பாரி லேநமை ஓங்கவைப் பாரெவர்
வாரி ஞானமும் வழங்கிடும் அத்தரே !
(வஞ்சி விருத்தம்)
அத்தர் தம்மை அன்புடன்
புத்தி தன்னில் போற்றிடு
இத்த ரணியில் யாங்கணும்
சுத்த மானோர் ஆசானே !
(நால்வகைப் பாக்களுக்கும் உண்டான விருத்தம் எனும் பாவினத்தைக் கொண்டு பாடப்பெற்றதாகும்.)
-விவேக்பாரதி
05.09.2015
ஆசானைப் போற்றி அரும்பாக்கள் சொல்கின்றேன்
மாசாகி டாமல் மகேசனும் காக்கவே !
நூல் :
(வெளிவிருத்தம்)
ஆசிரியர்கள் அறிவின் தேக்கம் எனச்சொல்வாய் - அவர்தாளில்
மாசிலா நல்மணியாய் மனதைப் பொழிந்திடுவாய் - அவர்தாளில்
கூசிடாத சுடரொளியாம் குணத்தைப் பெற்றிடுவாய் - அவர்தாளில்
பேசிடாது விழுந்து பணிவாய் உயர்வுருவாய் - அவர்தாளில் !
(ஆசிரிய விருத்தம்)
அவரது தாளில் நீயும்
அன்பெனும் பூவைக் கொட்டித்
தவறுகள் களைய வேண்டித்
தவங்களைப் புரிவாய் நாளும் !
புவனமும் புண்ய மெய்தப்
புதுப்புதுக் கலைகள் கற்று
நவநனி நாக ரீகம்
நல்குபவர் ஆசான் மாரே !
(கலி விருத்தம்)
மாரி லேநமை வைத்தெழில் கல்வியின்
வேரி னையரும் பாலென ஊட்டியே
பாரி லேநமை ஓங்கவைப் பாரெவர்
வாரி ஞானமும் வழங்கிடும் அத்தரே !
(வஞ்சி விருத்தம்)
அத்தர் தம்மை அன்புடன்
புத்தி தன்னில் போற்றிடு
இத்த ரணியில் யாங்கணும்
சுத்த மானோர் ஆசானே !
(நால்வகைப் பாக்களுக்கும் உண்டான விருத்தம் எனும் பாவினத்தைக் கொண்டு பாடப்பெற்றதாகும்.)
-விவேக்பாரதி
05.09.2015
Comments
Post a Comment