வெள்ளத்து உழலுது சென்னை
வெள்ளத் துழலுது சென்னை - இந்த
வேதனை கண்டும் இரங்காயோ ! அன்னை !
உள்ளத்தில் கோபமும் உண்டோ - என்ன
உள்ளதென் றாலும் இயம்பிடு தேவி !
தூசுக்கு நிலந்தன்னை ஆக்கி - நல்ல
தூய்மைதனை இந்த மண்விட்டுப் போக்கி
மாசுக்கு பூமியை விற்று - என்றும்
மாண்டிட லாக துன்பங்கள் பெற்றுக்
காசுக்கு அலைவதைக் கண்டு - நீயும்
காய்ந்து சினங்கொண்டு விட்டாயோ தேவி !
பேசிடு பேசிடு தேவி - இந்தப்
பேதைகள் உன்மடிப் பிள்ளைகள் அன்றோ ? (வெள்ளத்... )
உள்ளத்தி லேயொன்றை வைத்து - இங்கு
ஊருக்கு வேறொன்று பொய்யாய் மொழிந்து
கள்ளத்த னம்மிகச் செய்து - வாழும்
கயவர்கள் பூமியில் உள்ளனர் என்று
வெள்ளத்தை இங்கே அனுப்பி - கெட்ட
வேடங்கள் சாயங்கள் யாவையும் மாய
கள்ளொத்த புன்னைகை யாளே - செய்த
காரிய மோயிது கூறிடு தாயே ! (வெள்ளத்...)
சின்னஞ் சிறியவர் வந்து - உன்றன்
சீரிய மென்மலர்ப் பாதங்கள் பற்றிக்
கன்னல் மொழியித ழாலே - பள்ளிக்
கஷ்டங்கள் கூறவே வெள்ளமும் தந்து
அன்னவர் மகிழ்துமி ருக்க - அன்னை
அன்புப் பரிசெனக் கொடுத்துவிட் டாயோ
சென்னையைக் நீ!கொஞ்சும் நோக்கு - மக்கள்
செத்து மடிந்திடும் இன்னல்கள் போக்கு ! (வெள்ளத்...)
அம்மையே கோபம் விடுத்து - இந்த
அவல நிலையிது மாய்ந்திடச் செய்து
வெம்மை கொடுத்திடும் வெள்ளம் - விட்டு
வேகமாய்ச் சென்றிட அருளது தாராய் !
கம்ம லழகுடை யோளே - இங்கு
காரிய மாற்றிடும் இளைஞரின் கைகள்
செம்மை புரிந்திட நீயும் - நின்று
துணையெனச் சேருவை சேருவை தேவி ! (வெள்ளத்..,)
-விவேக்பாரதி
09.12.2015
வேதனை கண்டும் இரங்காயோ ! அன்னை !
உள்ளத்தில் கோபமும் உண்டோ - என்ன
உள்ளதென் றாலும் இயம்பிடு தேவி !
தூசுக்கு நிலந்தன்னை ஆக்கி - நல்ல
தூய்மைதனை இந்த மண்விட்டுப் போக்கி
மாசுக்கு பூமியை விற்று - என்றும்
மாண்டிட லாக துன்பங்கள் பெற்றுக்
காசுக்கு அலைவதைக் கண்டு - நீயும்
காய்ந்து சினங்கொண்டு விட்டாயோ தேவி !
பேசிடு பேசிடு தேவி - இந்தப்
பேதைகள் உன்மடிப் பிள்ளைகள் அன்றோ ? (வெள்ளத்... )
உள்ளத்தி லேயொன்றை வைத்து - இங்கு
ஊருக்கு வேறொன்று பொய்யாய் மொழிந்து
கள்ளத்த னம்மிகச் செய்து - வாழும்
கயவர்கள் பூமியில் உள்ளனர் என்று
வெள்ளத்தை இங்கே அனுப்பி - கெட்ட
வேடங்கள் சாயங்கள் யாவையும் மாய
கள்ளொத்த புன்னைகை யாளே - செய்த
காரிய மோயிது கூறிடு தாயே ! (வெள்ளத்...)
சின்னஞ் சிறியவர் வந்து - உன்றன்
சீரிய மென்மலர்ப் பாதங்கள் பற்றிக்
கன்னல் மொழியித ழாலே - பள்ளிக்
கஷ்டங்கள் கூறவே வெள்ளமும் தந்து
அன்னவர் மகிழ்துமி ருக்க - அன்னை
அன்புப் பரிசெனக் கொடுத்துவிட் டாயோ
சென்னையைக் நீ!கொஞ்சும் நோக்கு - மக்கள்
செத்து மடிந்திடும் இன்னல்கள் போக்கு ! (வெள்ளத்...)
அம்மையே கோபம் விடுத்து - இந்த
அவல நிலையிது மாய்ந்திடச் செய்து
வெம்மை கொடுத்திடும் வெள்ளம் - விட்டு
வேகமாய்ச் சென்றிட அருளது தாராய் !
கம்ம லழகுடை யோளே - இங்கு
காரிய மாற்றிடும் இளைஞரின் கைகள்
செம்மை புரிந்திட நீயும் - நின்று
துணையெனச் சேருவை சேருவை தேவி ! (வெள்ளத்..,)
-விவேக்பாரதி
09.12.2015
Comments
Post a Comment