வீர விதை
வீரம் விதையாய் விழுந்ததினம் - இன்று
வியனுல கிஃதும் அழுததினம்
பாரத நாட்டின் மாவீரன் - வீர
பகத்சிங் இறையைச் சேர்ந்ததினம்
பஞ்சாப் கண்ட இளஞ்சிங்கம் - தோளில்
பராக்கி ரமத்தை கொண்டவன்தான்
அஞ்சா நெஞ்சன் அன்றொருநாள் - வந்த
ஆங்கி லேயனை எதிர்த்தவன்தான்
நாத்திகம் பேசிய நல்லறிவி - வாழும்
நாட்டை ஆங்கிலர்க் கைவிட்டு
காத்திட வேண்டி உயிர்விட்டான் - இவன்
கடமை கண்ணியம் போற்றுதுமே !
-விவேக்பாரதி
23.03.2015
வியனுல கிஃதும் அழுததினம்
பாரத நாட்டின் மாவீரன் - வீர
பகத்சிங் இறையைச் சேர்ந்ததினம்
பஞ்சாப் கண்ட இளஞ்சிங்கம் - தோளில்
பராக்கி ரமத்தை கொண்டவன்தான்
அஞ்சா நெஞ்சன் அன்றொருநாள் - வந்த
ஆங்கி லேயனை எதிர்த்தவன்தான்
நாத்திகம் பேசிய நல்லறிவி - வாழும்
நாட்டை ஆங்கிலர்க் கைவிட்டு
காத்திட வேண்டி உயிர்விட்டான் - இவன்
கடமை கண்ணியம் போற்றுதுமே !
-விவேக்பாரதி
23.03.2015
Comments
Post a Comment