பாரதி பிறந்தான்
பாரதி வந்துதித்தான் - இந்தப்
பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா !
யாரவர் இங்குளரோ - இந்த
யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே !
நாரதர் கானமென - நல்ல
நற்றமிழ் தூவிடும் வானமெனச்
சீருடன் வந்தவன்தான் - இந்தச்
சித்திர பானுவி லுதித்தவன்காண் !
கன்னங் கரியதுவாய் - நின்ற
காரிருள் வானத் திடலினிலே
இன்னல் களைவதுவாய் - அந்த
இந்துவை ஒத்த ஒளிர்மதியாய்
முன்னம் உதித்தவன்காண் - நல்ல
முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம்
சின்ன வயதுமுதல் - பாக்கள்
சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..)
சக்திக் கொருபுலவன் - பொங்கும்
சாகர மொத்த கவிவளவன் !
பக்திக் கொருகவிஞன் - இந்தப்
பாரினுக் கேற்ற தமிழ்மறவன்
முக்கனி யொத்ததுவாய் - இன்பம்
முழுவது மள்ளிக் கொடுப்பதுவாய்
மிக்கக் கவிசொலுவான் - சோதி
மின்னிடும் மாகவி பாரதியே ! (பாரதி..)
-விவேக்பாரதி
11.12.2015
பாரிடை துன்பங்கள் மாய்ந்ததம்மா !
யாரவர் இங்குளரோ - இந்த
யாப்புக் கவிஞனை மிஞ்சிடவே !
நாரதர் கானமென - நல்ல
நற்றமிழ் தூவிடும் வானமெனச்
சீருடன் வந்தவன்தான் - இந்தச்
சித்திர பானுவி லுதித்தவன்காண் !
கன்னங் கரியதுவாய் - நின்ற
காரிருள் வானத் திடலினிலே
இன்னல் களைவதுவாய் - அந்த
இந்துவை ஒத்த ஒளிர்மதியாய்
முன்னம் உதித்தவன்காண் - நல்ல
முத்தமிழ்க் கவிதையின் நாயகனாம்
சின்ன வயதுமுதல் - பாக்கள்
சிந்திடும் வித்தகன் பாரதிகாண் ! (பாரதி..)
சக்திக் கொருபுலவன் - பொங்கும்
சாகர மொத்த கவிவளவன் !
பக்திக் கொருகவிஞன் - இந்தப்
பாரினுக் கேற்ற தமிழ்மறவன்
முக்கனி யொத்ததுவாய் - இன்பம்
முழுவது மள்ளிக் கொடுப்பதுவாய்
மிக்கக் கவிசொலுவான் - சோதி
மின்னிடும் மாகவி பாரதியே ! (பாரதி..)
-விவேக்பாரதி
11.12.2015
Comments
Post a Comment