வாழி சக்தி வாழி சக்தி
வாழி சக்தி வாழி சக்தி
வாழி சக்தியே - என்று
வாக்கு சொல்லும் வேளை சேரும்
வாழ்வில் முக்தியே!
பாவம் செய்த பக்த ருக்குப்
பாசங் காட்டுவாள் - இங்கு
ஜீவன் செய்யும் குற்றந் தம்மைச்
சீவி மாய்ப்பவள்!
யாவ ருக்கும் அருள்கொ டுத்து
யாண்டும் காப்பவள் - உயர்த்
தேவி ஆதி சக்தி யென்னுந்
தாயைப் போற்றுதும் !
பாசங் காட்டுவாள் - இங்கு
ஜீவன் செய்யும் குற்றந் தம்மைச்
சீவி மாய்ப்பவள்!
யாவ ருக்கும் அருள்கொ டுத்து
யாண்டும் காப்பவள் - உயர்த்
தேவி ஆதி சக்தி யென்னுந்
தாயைப் போற்றுதும் !
வாழி சக்தி வாழி சக்தி
வாழி சக்தியே - என்று
வாக்கு சொல்லும் வேளை சேரும்
வாழ்வில் முக்தியே!
காற்று மாகிப் புனலு மாகிக்
கவியு மாகுவாள் - நல்ல
சேற்றில் பூக்கும் கமல மாகிச்
சேலு மாகுவாள்!
ஊற்றில் ஊறும் நீரு மாகி
உயிர்கள் பேணுவாள் - விதியை
மாற்றி உலகை ஆட்டும் சக்தி
மாண்பைப் போற்றுதும்!!
வாழி சக்தி வாழி சக்தி
வாழி சக்தியே - என்று
வாக்கு சொல்லும் வேளை சேரும்
வாழ்வில் முக்தியே!!
-விவேக்பாரதி
28.06.2015
Comments
Post a Comment