சக்திக் கடன்

உலகமெலாம் போற்றுகின்ற தமிழில் மின்னும்
   உயர்வான இலக்கணத்தை அறிய வெண்ணி
கலைத்தாக மடங்காத கார ணத்தால்
   கவித்தாகம் மிகவுற்றுப் பாக்கள் யாக்க
மலையொன்றைச் சுண்டெலிகள் மயிரால் கட்டி
   மறுபக்கம் சாய்த்துவிட முயல்வ தைப்போல்
தலையாட்டி வந்திட்டேன் சக்தி தேவீ !
   தளிரென்னைக் காப்பதுநின் கடனே காண்க !

-விவேக்பாரதி
28.04.2016

Comments

Popular Posts