மகிழும் கண்கள்

இதழினிலே பூசுகிறாள்
   இனிமைத்தமிழ்ச் சாயம் - அதில்
   இருப்பதெலாம் நேயம் - எனை
   இயக்கிடுமம் மாயம் - அவள்
   இனியகுரல் கேட்கையிலே
   இன்புறுமென் காயம் !
 மதகளிற்றை ஒத்ததனம்
   மல்லிகைப்பூக் கண்கள் - அதில்
   மயங்கிடுவர் பெண்கள் - அவள்
   மழலைமொழி விண்கள் - சுடர்
   மலர்க்கொடியாய் இடையுடையாள்
   மகிழ்ந்திடுமென் கண்கள் !

-விவேக்பாரதி
28.04.2016

Comments

Popular Posts