ஆயிரம் ஆயிரம்

ஆயிர மாயிர ஆண்டுக்கு முன்னரே
   அன்பினில் நாமுமி ணைந்துவிட்டோம்
   அதனாலினி பிரிவேயிலை
    உயர்வோமொரு குறைவேயிலை
   அத்தானை முத்தமிட் டாடடியோ !
வாயினி லேமுத்தங் கொட்டிடு கண்மணி
   வாஞ்சையோ டேவந்த ணைத்துக்கொள்வாய்
   வளமேதரும் எழில்காதலில்
   வளைவோம்நிதம் வளர்வோமென
   வார்த்தைகள் சொல்லியே பாடடியோ !





-விவேக்பாரதி
28.04.2016

Comments

Popular Posts