வானம்
புத்திக்கும் சக்திக்கும் எட்டாத
தூரத்தின்
பூங்கா வானம் !
எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை ! சூரியனும்
ஏறி நிற்க
மத்திக்கு மஞ்சளுறும் ! மாலையிலே சிவப்பாகும் !
மறைந்த பின்போ
முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் ! அதன்சோதி
முழுமை வெள்ளி !
மேகங்கள் மிதக்கின்ற நீலநிறப் பெருங்கடலாம் !
மேளம் கொட்டி
ராகங்கள் இசைக்கின்ற பூபாளம் எல்லாமே
ராவின் வண்ணப்
போகங்கள் கொண்டிருக்கும் மழைமேகம் காட்டுகின்ற
பொம்ம லாட்டம் !
மோகங்கள் கூட்டுகின்ற வானவில்லும் கண்ணுக்கு
மோட்ச மாகும் !
எல்லையதும் இல்லாத எழில்வண்ணப் பாய்விரிப்பை !
என்றும் வானை
வல்விரைந்து படமெடுக்கும் புகைப்படக் கருவியது
வாளாம் மின்னல் !
சொல்லுபொருள் யாவிலுமே உயர்ந்ததுகாண் வானந்தான்
சொர்க்க வாசல் !
கொல்லு(ம்)விதம் அதில்புகையைக் கலந்துவிட்டு தீமைதனைக்
கொள்ளல் வேண்டா !
-விவேக்பாரதி
20.10.2015
பூங்கா வானம் !
எத்திக்கும் விரிந்திருக்கும் பூஞ்சோலை ! சூரியனும்
ஏறி நிற்க
மத்திக்கு மஞ்சளுறும் ! மாலையிலே சிவப்பாகும் !
மறைந்த பின்போ
முத்துக்கள் பூத்திருக்கும் இருள்வானம் ! அதன்சோதி
முழுமை வெள்ளி !
மேகங்கள் மிதக்கின்ற நீலநிறப் பெருங்கடலாம் !
மேளம் கொட்டி
ராகங்கள் இசைக்கின்ற பூபாளம் எல்லாமே
ராவின் வண்ணப்
போகங்கள் கொண்டிருக்கும் மழைமேகம் காட்டுகின்ற
பொம்ம லாட்டம் !
மோகங்கள் கூட்டுகின்ற வானவில்லும் கண்ணுக்கு
மோட்ச மாகும் !
எல்லையதும் இல்லாத எழில்வண்ணப் பாய்விரிப்பை !
என்றும் வானை
வல்விரைந்து படமெடுக்கும் புகைப்படக் கருவியது
வாளாம் மின்னல் !
சொல்லுபொருள் யாவிலுமே உயர்ந்ததுகாண் வானந்தான்
சொர்க்க வாசல் !
கொல்லு(ம்)விதம் அதில்புகையைக் கலந்துவிட்டு தீமைதனைக்
கொள்ளல் வேண்டா !
-விவேக்பாரதி
20.10.2015
Comments
Post a Comment