கேள்வி தொடுக்கிறேன்
அலையும் மேகங்களே ! - உமை
அமிழ்த்தி அழகு வடிவங்களாய்க்
கலைகள் ஆக்கியதார் ? - விடை
காட்டுங்க ளேன்சுவை கூட்டுங்களேன் !
மலையின் வடிவங்களே ! - உமை
மாபெரும் முளிகொண்டு வளைவுகளாய்
சிலைசெய்த தார்செயலோ ? - பதில்
சாற்றுங்க ளேனறி வூற்றுங்களேன் !
காற்றுக் கிடையினிலே! - மணங்
காட்டிப் பறக்கின்ற மலரினங்காள்
தூற்றி உமையுமிங்கே - வெகு
தூரத்தில் விட்டதும் யாருரைப்பீர் ?
சேற்றுக் குளத்திடையே - ஒழி
சேர்ந்து விளங்கிடும் தாமரைகாள்
சேற்றிடை உங்களையும் - நிலை
சேர்த்தது மார்வினை சாற்றுமினே !
வானக் கருமைகளே - மிக
வாரித் தெளித்தும்மில் விண்மீனை
மானப் பெரிதனவே - எழில்
மன்னப் பதித்தது மார்பணியோ ?
கானக் குயிலினமே - இசை
கற்றுக் கொடுத்தது மாருரைப்பீர்
ஏனித் தாரணியில் - விடை
ஏற்றிடாக் கேள்விகள் வாழுதுவோ ?
யாரிங் குரைத்திடுவார் ? - புவி
யாரால் இயங்கு தெனுங்கதையை
யாரிங்கு மொழிந்திடுவார் - எனை
யாண்டிடும் ஐயத்தைத் தான்களையப்
பாரினி லாருளரோ ? - விடை
பகருமின் ! பகருமின் ! அறிவுடையீர் !
சீரிய அறிவுபெறக் - கவிச்
சிறுவன் முயல்கிறேன் பகருமினே !
-விவேக்பாரதி
16.08.2015
அமிழ்த்தி அழகு வடிவங்களாய்க்
கலைகள் ஆக்கியதார் ? - விடை
காட்டுங்க ளேன்சுவை கூட்டுங்களேன் !
மலையின் வடிவங்களே ! - உமை
மாபெரும் முளிகொண்டு வளைவுகளாய்
சிலைசெய்த தார்செயலோ ? - பதில்
சாற்றுங்க ளேனறி வூற்றுங்களேன் !
காற்றுக் கிடையினிலே! - மணங்
காட்டிப் பறக்கின்ற மலரினங்காள்
தூற்றி உமையுமிங்கே - வெகு
தூரத்தில் விட்டதும் யாருரைப்பீர் ?
சேற்றுக் குளத்திடையே - ஒழி
சேர்ந்து விளங்கிடும் தாமரைகாள்
சேற்றிடை உங்களையும் - நிலை
சேர்த்தது மார்வினை சாற்றுமினே !
வானக் கருமைகளே - மிக
வாரித் தெளித்தும்மில் விண்மீனை
மானப் பெரிதனவே - எழில்
மன்னப் பதித்தது மார்பணியோ ?
கானக் குயிலினமே - இசை
கற்றுக் கொடுத்தது மாருரைப்பீர்
ஏனித் தாரணியில் - விடை
ஏற்றிடாக் கேள்விகள் வாழுதுவோ ?
யாரிங் குரைத்திடுவார் ? - புவி
யாரால் இயங்கு தெனுங்கதையை
யாரிங்கு மொழிந்திடுவார் - எனை
யாண்டிடும் ஐயத்தைத் தான்களையப்
பாரினி லாருளரோ ? - விடை
பகருமின் ! பகருமின் ! அறிவுடையீர் !
சீரிய அறிவுபெறக் - கவிச்
சிறுவன் முயல்கிறேன் பகருமினே !
-விவேக்பாரதி
16.08.2015
Comments
Post a Comment