சரமழை வித்தகம்

அழகே அழகாய்த் தொலைந்தேன் மலைத்தேன்
அழகாய்த் தொலைவில் உயிர்த்தேன் - மெழுகாய்த்
தொலைந்தேன் உயிர்த்தேன் இடையில் தொடர்த்து
மலைத்தேன் மெழுகாய்த் தொடர்ந்து !


சரமழை வித்தகம் : 

சரமழை என்பது வெண்பாவைச் சுவைபட எழுதும் யுக்திகளுள் ஒன்று. நாமெல்லோரும்

சிவாஜி
வாயிலே
ஜிலேபி

என்ற வாக்கியத்தைக் கேள்வி பட்டிருப்போம். முழுப்பாடலையும் இதுபோல் எழுதுவதே.

-விவேக்பாரதி
07.11.2015

Comments

Popular Posts