ஒன்றில் இரண்டு
(ஒரு ஆசானுக்கும் மாணவனுக்கும் நடக்கும் பேச்சு....)
வினாவுத்தரம்
எதுதான் உலகில் எமதோ பிறர்க்கும்
எதைநான் தரவோ கொடுக்க ? - மதியும்
பொதுவாம் நலமும் பொலிவும் உளதே !
எதுவோ பொதுவோ கொடு !
மாணவனின் வினா :
எதுதான் எமதோ எதைநான் கொடுக்க
பொதுவாம் பொலிவும் எது ?
ஆசானின் பதில் :
உலகில் பிறர்க்குத் தரவோ மதியும்
நலமும் உளதே பொது !
(ஒரே வெண்பாவை எழுதி அதிலே ஒற்றைப்படைச் சீர்களைச் சேர்த்தால் ஒரு குறள் வெண்பாவாகவும் இரட்டைப்படைச் சீர்களைச் சேர்த்தால் மற்றொரு குறள் வெண்பாவாகவும் எஞ்சும் சீரை விளியாகவும் வைத்துப் பாடுவது "ஒன்றில் இரண்டு")
-விவேக்பாரதி
11.08.2015
வினாவுத்தரம்
எதுதான் உலகில் எமதோ பிறர்க்கும்
எதைநான் தரவோ கொடுக்க ? - மதியும்
பொதுவாம் நலமும் பொலிவும் உளதே !
எதுவோ பொதுவோ கொடு !
மாணவனின் வினா :
எதுதான் எமதோ எதைநான் கொடுக்க
பொதுவாம் பொலிவும் எது ?
ஆசானின் பதில் :
உலகில் பிறர்க்குத் தரவோ மதியும்
நலமும் உளதே பொது !
(ஒரே வெண்பாவை எழுதி அதிலே ஒற்றைப்படைச் சீர்களைச் சேர்த்தால் ஒரு குறள் வெண்பாவாகவும் இரட்டைப்படைச் சீர்களைச் சேர்த்தால் மற்றொரு குறள் வெண்பாவாகவும் எஞ்சும் சீரை விளியாகவும் வைத்துப் பாடுவது "ஒன்றில் இரண்டு")
-விவேக்பாரதி
11.08.2015
Comments
Post a Comment