புன்னகைப் பூமகள்
புன்னகைப் பூமகள் பூங்குழ லிற்புது
புன்னிய காவியம் வாசிக்கி றேன் !
என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த
ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் !
மின்னலை யொத்தவள் கன்னங்க ளிற்சுதி
மீட்டுமி சைகண்டு பூசிக்கி றேன் !
கன்னலி தழ்கொண்டு காயங்க ளாற்றிட
கன்னியின் பொன்னிதழ் யாசிக்கி றேன் !
முத்துச்சி ரிப்பெழில் பெற்றும கிழ்ந்திட
முன்னிலும் பின்னிலும் தத்துகி றேன்
பித்தனைப் போலவள் பிஞ்சுப்ப தத்தினை
பின்னிப்பி டித்துநான் கத்துகி றேன் !
எத்தனை நல்லெழில் ஏந்துகின் றாளவள்
எத்தனை யின்பங்கள் காட்டுகின் றாள்
வித்தக னென்னையும் வீழ்த்துகின் றாளவள்
விந்தைகள் நெஞ்சினில் கூட்டுகின்றாள் !
வண்ணக்க ளஞ்சிய வார்ப்பனை யேயந்த
வஞ்சிக ழுத்தினிற் சூடுகின் றாள் !
எண்ணத்தி லேநின்று பாடுகின் றாளவள்
என்னுடன் சேர்ந்துற வாடுகின் றாள் !
விண்ணிற்றி ரிந்திடும் மீனினைப் போலொளி
வீசிடு மன்னவள் கண்கள டீ !
வெண்ணில வுங்கர்வங் கொண்டிடு மேயவள்
வெட்கத்திற் கேங்குவர் பெண்கள டீ !
-விவேக்பாரதி
04.04.2016
புன்னிய காவியம் வாசிக்கி றேன் !
என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த
ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் !
மின்னலை யொத்தவள் கன்னங்க ளிற்சுதி
மீட்டுமி சைகண்டு பூசிக்கி றேன் !
கன்னலி தழ்கொண்டு காயங்க ளாற்றிட
கன்னியின் பொன்னிதழ் யாசிக்கி றேன் !
முத்துச்சி ரிப்பெழில் பெற்றும கிழ்ந்திட
முன்னிலும் பின்னிலும் தத்துகி றேன்
பித்தனைப் போலவள் பிஞ்சுப்ப தத்தினை
பின்னிப்பி டித்துநான் கத்துகி றேன் !
எத்தனை நல்லெழில் ஏந்துகின் றாளவள்
எத்தனை யின்பங்கள் காட்டுகின் றாள்
வித்தக னென்னையும் வீழ்த்துகின் றாளவள்
விந்தைகள் நெஞ்சினில் கூட்டுகின்றாள் !
வண்ணக்க ளஞ்சிய வார்ப்பனை யேயந்த
வஞ்சிக ழுத்தினிற் சூடுகின் றாள் !
எண்ணத்தி லேநின்று பாடுகின் றாளவள்
என்னுடன் சேர்ந்துற வாடுகின் றாள் !
விண்ணிற்றி ரிந்திடும் மீனினைப் போலொளி
வீசிடு மன்னவள் கண்கள டீ !
வெண்ணில வுங்கர்வங் கொண்டிடு மேயவள்
வெட்கத்திற் கேங்குவர் பெண்கள டீ !
-விவேக்பாரதி
04.04.2016
Comments
Post a Comment