21ஆம் நூற்றாண்டுக் கவிதை
இருபத்தி ஒன்றாவது நூற்றாண் டிஃதில்
இயற்றமிழின் கவிதையினை இருவே றாகப்
பிரித்துவைத் துள்ளதிந்தக் கவிஞர் வர்க்கம்
பிழையில்லா இலக்கணத்தின் கவியாம் ஒன்று !
வருகின்ற கருத்தினையே வடிவ மற்று
வனைகின்ற புதுக்கவியாம் மற்றொன் றிந்தப்
பிரிவுக்குப் பழகிவிட்டேன் பிரிவை நானும்
பின்னாலே வரும்வாறு புரிந்து கொண்டேன் !
புதுக்கவிதை என்பதென்றன் காதல் தாங்கும்
புதுப்பொலிவுக் காதலிதான் மரபோ என்னை
வதுவையது புரிந்துகொண்ட இல்லாள் என்பேன்
வளமான கருத்தன்றோ ? சிரித்துக் கொள்வேன் !
பொதுக்கவிதைச் செல்வத்தை இவ்வா றுன்றன்
போக்கிற்கு எண்ணுவது சரியோ வென்றால்
எதுவந்தால் எனக்கென்ன எனக்கு மட்டும்
எப்போதும் காதலியென் கவிதை யென்பேன் !
மரபினிலே கவியெழுதும் பொழுதோ என்றன்
மனைவியினைக் கொஞ்சுகின்ற உணர்வு தோன்றும் !
கரத்தோடு புதுக்கவிதை படைக்கும் போழ்தோ
காதலியைக் கொஞ்சுகின்ற மயக்கம் நேரும்
சிரமந்தான் இருவீடு என்றால் கூட
சிறப்பாக இருக்கிறது ! நீங்கள் கூட
இருவீடு வேண்டுமெனில் வைத்துக் கொள்வீர்
இருக்கட்டும் இருவீடு கவியில் மட்டும் !!
-விவேக்பாரதி
19.04.2016
இயற்றமிழின் கவிதையினை இருவே றாகப்
பிரித்துவைத் துள்ளதிந்தக் கவிஞர் வர்க்கம்
பிழையில்லா இலக்கணத்தின் கவியாம் ஒன்று !
வருகின்ற கருத்தினையே வடிவ மற்று
வனைகின்ற புதுக்கவியாம் மற்றொன் றிந்தப்
பிரிவுக்குப் பழகிவிட்டேன் பிரிவை நானும்
பின்னாலே வரும்வாறு புரிந்து கொண்டேன் !
புதுக்கவிதை என்பதென்றன் காதல் தாங்கும்
புதுப்பொலிவுக் காதலிதான் மரபோ என்னை
வதுவையது புரிந்துகொண்ட இல்லாள் என்பேன்
வளமான கருத்தன்றோ ? சிரித்துக் கொள்வேன் !
பொதுக்கவிதைச் செல்வத்தை இவ்வா றுன்றன்
போக்கிற்கு எண்ணுவது சரியோ வென்றால்
எதுவந்தால் எனக்கென்ன எனக்கு மட்டும்
எப்போதும் காதலியென் கவிதை யென்பேன் !
மரபினிலே கவியெழுதும் பொழுதோ என்றன்
மனைவியினைக் கொஞ்சுகின்ற உணர்வு தோன்றும் !
கரத்தோடு புதுக்கவிதை படைக்கும் போழ்தோ
காதலியைக் கொஞ்சுகின்ற மயக்கம் நேரும்
சிரமந்தான் இருவீடு என்றால் கூட
சிறப்பாக இருக்கிறது ! நீங்கள் கூட
இருவீடு வேண்டுமெனில் வைத்துக் கொள்வீர்
இருக்கட்டும் இருவீடு கவியில் மட்டும் !!
-விவேக்பாரதி
19.04.2016
Comments
Post a Comment