பாரதி ஆழ்வான்
கணபதி ராயனைக் கருத்தினில் வைத்தருங்
கவிதைக ளோடிவன் வாழ்வான்! - நம்
குணமுயர் வெய்திட விடுதலை கூடிடக்
குறியெனப் பாடலை ஆள்வான்!
வணமிகு செந்தமிழ்க் கவிதையில் மாலைகள்
வனைந்தவன் கால்களைச் சூழ்வான்! - பெருந்
திணவுடைத் தோளினன் திமிருடை நெஞ்சகத்
திறத்தினன் பாரதி ஆழ்வான்!
விடுதலை யாகிநம் வியத்தகு பாரதம்
விசையுறப் பாடல்கள் பாடி - அவள்
மிடுக்குகள் யாவையும் மிளிர்வது கண்டிட
மிகவும கிழ்ச்சிகொண் டாடி
"உடலுயிர் ஆவியும் அவளருந் தாளினில்
உயர்வென வைத்திட வீழ்வான் - புவிக்
கடலினை தேவரும் கடைந்திடத் தோன்றிய
கவிரசம் பாரதி ஆழ்வான்!
வாணியின் தாளினை வணங்கிவ ழுத்திட
வலிமைகள் கொள்ளுவம் என்பான்! - உடல்
நாணுதல் தீதென நலிவுகள் போமென
நலவுரை செய்தபின் உண்பான்!
காணுநல் காளியைக் கவிதையில் வாழ்த்திடக்
கடவுளர் வாழிடம் மீள்வான்! - ஒளி
பூணுமக் காளியின் புதல்வனும் தாசனும்
புதையலும் பாரதி ஆழ்வான்!
செல்வமெ னத்திகழ் செழுந்தமிழ்த் தாய்மடிச்
செறிவைவி யந்திடும் பாடல் - பல
சொல்லிய வள்பதம் புகழ்ந்துவ ணங்கியே
சொரிந்திடு வான்விளை யாடல்!
வல்விரை வாய்க்கவி வனைந்திடும் ஆற்றலில்
வனப்புகள் காட்டிடும் மேல்வான்!
நல்லவ ழித்துணை நமதறி வின்துணை
நடத்திடும் பாரதி ஆழ்வான்!
-விவேக்பாரதி
கவிதைக ளோடிவன் வாழ்வான்! - நம்
குணமுயர் வெய்திட விடுதலை கூடிடக்
குறியெனப் பாடலை ஆள்வான்!
வணமிகு செந்தமிழ்க் கவிதையில் மாலைகள்
வனைந்தவன் கால்களைச் சூழ்வான்! - பெருந்
திணவுடைத் தோளினன் திமிருடை நெஞ்சகத்
திறத்தினன் பாரதி ஆழ்வான்!
விடுதலை யாகிநம் வியத்தகு பாரதம்
விசையுறப் பாடல்கள் பாடி - அவள்
மிடுக்குகள் யாவையும் மிளிர்வது கண்டிட
மிகவும கிழ்ச்சிகொண் டாடி
"உடலுயிர் ஆவியும் அவளருந் தாளினில்
உயர்வென வைத்திட வீழ்வான் - புவிக்
கடலினை தேவரும் கடைந்திடத் தோன்றிய
கவிரசம் பாரதி ஆழ்வான்!
வாணியின் தாளினை வணங்கிவ ழுத்திட
வலிமைகள் கொள்ளுவம் என்பான்! - உடல்
நாணுதல் தீதென நலிவுகள் போமென
நலவுரை செய்தபின் உண்பான்!
காணுநல் காளியைக் கவிதையில் வாழ்த்திடக்
கடவுளர் வாழிடம் மீள்வான்! - ஒளி
பூணுமக் காளியின் புதல்வனும் தாசனும்
புதையலும் பாரதி ஆழ்வான்!
செல்வமெ னத்திகழ் செழுந்தமிழ்த் தாய்மடிச்
செறிவைவி யந்திடும் பாடல் - பல
சொல்லிய வள்பதம் புகழ்ந்துவ ணங்கியே
சொரிந்திடு வான்விளை யாடல்!
வல்விரை வாய்க்கவி வனைந்திடும் ஆற்றலில்
வனப்புகள் காட்டிடும் மேல்வான்!
நல்லவ ழித்துணை நமதறி வின்துணை
நடத்திடும் பாரதி ஆழ்வான்!
-விவேக்பாரதி
Comments
Post a Comment