பாருக்கெல்லாம் குரு பாரதநாடு
பாரத
நாடு – இந்தப்
பாரினுக்கே
குருவாய் உயர் நாடு
மந்திரம்
போலே வந்தே மாதரம்
வந்து
நிறைந்த நாடு
வானவர்
ஞானியர் தெய்வங்கள் யாவும்
வாழ்ந்து
புகழ்ந்த நாடு
சந்ததி
கோடி சுகமாய் வாழ!
சுதந்திரம்
வாங்கிய நாடு – எங்கள்
தாய்த்திரு
நாடு என்பதைப் பாடு
தாராளமாகக்
கொண்டாடு!
உலகம்
வியக்கும் உன்னத ஞானம்
ஓங்கி
வளர்ந்த நாடு
உண்மை
வெல்லும் என்னும் தருமம்
ஊற்றி
வளர்த்த நன்னாடு
கலை,
பண்பாடு மொழிகள் நூறு
காட்சி
ஒன்றே நம் நாடு! – இன்று
காஷ்மீர்
என்னும் திலகம் அணிந்ததைக்
கம்பீரமாக
நீ பாடு!!
-விவேக்பாரதி
15.08.2019
Comments
Post a Comment