பைரவி வரும் வழி
"மரபின் மைந்தன் முத்தையா" பதிவிட்டிருந்த ஆதியோகி படத்தைக் கண்டதும் பாடியது..
வைர விளக்கொளி கண்மினுக்கத் - தன்
வஜ்ஜிர தேகம் ஜொலிஜொலிக்கப்
பைரவி வரும்வழி பார்த்தபடி - எம்
பரம னமர்கிறான் வேர்த்தபடி!
அண்டக் கருமைநி றத்தழகன் - அவள்
ஆவி விரும்பும்து டிப்பழகன்
கண்டக் கறுமைவி ஷத்தழகன் - மஹா
காளன் உருத்திரன் சடையழகன்!
நெற்றி விழியிமை சாந்தமுறத் - தன்
நேரிய இருவிழி வானலையக்
கற்றைச் சடைவளிக் காடலைய - அவன்
காத்தி ருக்கிறான் மனமிணைய!
பூத கணங்களும் ஆட்டத்தில் - ஒளி
பூமி முழுதுமோர் கூட்டத்தில்!
வேதம் முழங்கிடும் கோஷத்தில் - அவன்
வேண்டுதல் தீர்த்திடும் நேரத்தில்,
நிலவு சிரித்திடும் ராத்திரியில் - அவள்
நிமலை வரவினைப் பார்த்தபடி,
உலகு துதிக்கவ மர்கின்றான் - நம்
உள்ளப் பாறையில் அமர்கின்றான்!!
-விவேக்பாரதி
12.02.2018
வைர விளக்கொளி கண்மினுக்கத் - தன்
வஜ்ஜிர தேகம் ஜொலிஜொலிக்கப்
பைரவி வரும்வழி பார்த்தபடி - எம்
பரம னமர்கிறான் வேர்த்தபடி!
அண்டக் கருமைநி றத்தழகன் - அவள்
ஆவி விரும்பும்து டிப்பழகன்
கண்டக் கறுமைவி ஷத்தழகன் - மஹா
காளன் உருத்திரன் சடையழகன்!
நெற்றி விழியிமை சாந்தமுறத் - தன்
நேரிய இருவிழி வானலையக்
கற்றைச் சடைவளிக் காடலைய - அவன்
காத்தி ருக்கிறான் மனமிணைய!
பூத கணங்களும் ஆட்டத்தில் - ஒளி
பூமி முழுதுமோர் கூட்டத்தில்!
வேதம் முழங்கிடும் கோஷத்தில் - அவன்
வேண்டுதல் தீர்த்திடும் நேரத்தில்,
நிலவு சிரித்திடும் ராத்திரியில் - அவள்
நிமலை வரவினைப் பார்த்தபடி,
உலகு துதிக்கவ மர்கின்றான் - நம்
உள்ளப் பாறையில் அமர்கின்றான்!!
-விவேக்பாரதி
12.02.2018
Comments
Post a Comment