போதை வண்டு
தேனுண்ட பூச்சியை வண்டுண்ணுகிறது. அந்தத் தேன் பொன்வண்டின் வாயிலும் பட்டு, இதுவரை தேன் சுவை அறியா வண்டு போதை கொள்கிறது. தன்னை மறக்கிறது.
பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
உளறல் கொண்டிடும் பாட்டு! - ஒரு
வண்ண மலருக்கு மேலே - மது
மாந்தி யிருப்பத னாலே - என
தெண்ணம் பறப்பது கண்டீர் - அதில்
ஏறும் கவிதைகள் காணீர்!
காலுக் கடியினில் விண்மீன் - தலை
கவிழ்ந்து நடக்கின்ற கோலம்! - அட
மேலும் நிலவுகள் வந்து - என்
மெத்தையென் றாகிய காலம்! - சுவை
பாலும் நறுமலர்த் தேனும் - என்
பக்கத்தி லாறென வோடும் - கருங்
கோலக் குயில்வந்து காதில் - நல்ல
கோபுரக் கீர்த்தனை பாடும்!
மற்றை உயிரினம் எல்லாம் - எனை
மன்ன னெனச்சொல்லி போற்றும் - இவன்
ஒற்றைக் கவியெனத் தோளில் - மிக
ஒய்யார மாய்ப்புகழ்ந் தேற்றும் - சுதி
சற்றும் விலகுவ தில்லை - என்
சாதகம் கேளுங்கள் ரிங்ரிங்! - யான்
பெற்ற தனம்பெரி தில்லை - என்
பேச்சுக்கும் பாட்டுக்கும் முன்னால்!
வானவர் என்னுடை தோழர் - நான்
வாழு மிடமெங்கும் சொர்க்கம் - இசை
கானவர் என்னுடை சீடர் - என்
கவிதை முகில்மிசை ஊற்றும்! - தனி
மோனச் சுருதியும் பாட்டாய் - என்
முத்தமிழ் நாவிடை மாறும் - பெரும்
ஞான முடையபொன் வண்டு - அட
நானுமோர் அற்புத வண்டு!
கைகளைப் பின்னேம டக்கி - ஒரு
காலில் மறுகாலைப் போட்டு - என்
மெய்களைப் பேகிட விங்கே - புது
மேன்மைத் துயில்கொளு கின்றேன்! - சிலர்
பொய்களைக் கூறியென் தூக்கம் - கெடப்
பொல்லா வினைகளைச் செய்வார்! - அவர்
பொய்களை நீக்கியென் பெற்றி - சொல்ல
போகக் கவியிதைச் செய்தேன்!
இது
பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
உளறல் கொண்டிடும் பாட்டு!!
-விவேக்பாரதி
24.03.2018
பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
உளறல் கொண்டிடும் பாட்டு! - ஒரு
வண்ண மலருக்கு மேலே - மது
மாந்தி யிருப்பத னாலே - என
தெண்ணம் பறப்பது கண்டீர் - அதில்
ஏறும் கவிதைகள் காணீர்!
காலுக் கடியினில் விண்மீன் - தலை
கவிழ்ந்து நடக்கின்ற கோலம்! - அட
மேலும் நிலவுகள் வந்து - என்
மெத்தையென் றாகிய காலம்! - சுவை
பாலும் நறுமலர்த் தேனும் - என்
பக்கத்தி லாறென வோடும் - கருங்
கோலக் குயில்வந்து காதில் - நல்ல
கோபுரக் கீர்த்தனை பாடும்!
மற்றை உயிரினம் எல்லாம் - எனை
மன்ன னெனச்சொல்லி போற்றும் - இவன்
ஒற்றைக் கவியெனத் தோளில் - மிக
ஒய்யார மாய்ப்புகழ்ந் தேற்றும் - சுதி
சற்றும் விலகுவ தில்லை - என்
சாதகம் கேளுங்கள் ரிங்ரிங்! - யான்
பெற்ற தனம்பெரி தில்லை - என்
பேச்சுக்கும் பாட்டுக்கும் முன்னால்!
வானவர் என்னுடை தோழர் - நான்
வாழு மிடமெங்கும் சொர்க்கம் - இசை
கானவர் என்னுடை சீடர் - என்
கவிதை முகில்மிசை ஊற்றும்! - தனி
மோனச் சுருதியும் பாட்டாய் - என்
முத்தமிழ் நாவிடை மாறும் - பெரும்
ஞான முடையபொன் வண்டு - அட
நானுமோர் அற்புத வண்டு!
கைகளைப் பின்னேம டக்கி - ஒரு
காலில் மறுகாலைப் போட்டு - என்
மெய்களைப் பேகிட விங்கே - புது
மேன்மைத் துயில்கொளு கின்றேன்! - சிலர்
பொய்களைக் கூறியென் தூக்கம் - கெடப்
பொல்லா வினைகளைச் செய்வார்! - அவர்
பொய்களை நீக்கியென் பெற்றி - சொல்ல
போகக் கவியிதைச் செய்தேன்!
இது
பொன்வண்டு பாடிடும் பாட்டு - புதுப்
போதையில் பாடிடும் பாட்டு! - மது
உண்டம யக்கத்தின் பாட்டு - கொஞ்சம்
உளறல் கொண்டிடும் பாட்டு!!
-விவேக்பாரதி
24.03.2018
Comments
Post a Comment