கானப் பறவை

நான் கானப் பறவை தான்!
நாணலாகவும் மூங்கிலாகவும்
மாறி மாறிப்பல கோலம் போடுகிற
கானப் பறவை தான்!

காற்று வெளியெங்கும் கவிதை சொன்னபடி
நேற்று நாளைகளின் நினைவி ழந்தபடி
சிறகை அசைத்து வானில் பறக்கும்
கானப் பறவை தான்!

பாயும் மனதெங்கும் காளி நிழல்வந்து
பாட்டு சேர்க்கவதை வாங்கிப் பார்த்துப்புது
வார்த்தைகள் போட்டு மெட்டுகள் தீட்டும்
கானப் பறவை தான்!

உயரே பறக்கின்றேன்! என்
உச்சம் உமக்கு விளங்குவதில்லை!
உயிரில் பறக்கின்றேன்! அதன்
உஷ்ணம் யார்க்கும் தெரிவதுமில்லை!
லயமே என்கானம்! பல
லட்சம் வார்த்தையில் என்தியானம்!
சயமாய்ப் பறக்கின்றேன்! பல
சுவைகளைத் தேடிப் பறக்கின்றேன்!!


-விவேக்பாரதி 
10.03.2018

Comments

Popular Posts