சுகநிழல்
துயர்வந்து தூக்கத்தைத் தூரமாக்கும் போது
தூங்குதற்கு இடமேதடி
துஷ்டனைப் போல்வந்து நினைவென்னும் வேல்பாயத்
தூங்கிடற்கு இடமேதடி ?
அயர்வான கண்ணோடும் அன்பான விரல்தேடி
அலைகின்ற நெஞ்சினோடும்
அழுதேங்கி வாழ்கின்ற இரவென்னும் மரணத்தில்
அமைபெறும் வழியேதடி ?
கயலாடும் ஜாடியாய்க் கனவேந்தும் மூடியாய்க்
காலங்கள் போக்குகின்றேன்
கனியான நெஞ்சோடு கல்லடிகள் பட்டதால்
காயத்தில் வாடுகின்றேன் !
பயமென்ன உன்னிடம் பகர்தற்கு, நானென்றன்
பாதியை இழந்தேனடி
பக்குவம் கண்டிடும் வழிதேடி வழிதேடிப்
பாதையை இழந்தேனடி !
தூங்குதற்கு இடமேதடி
துஷ்டனைப் போல்வந்து நினைவென்னும் வேல்பாயத்
தூங்கிடற்கு இடமேதடி ?
அயர்வான கண்ணோடும் அன்பான விரல்தேடி
அலைகின்ற நெஞ்சினோடும்
அழுதேங்கி வாழ்கின்ற இரவென்னும் மரணத்தில்
அமைபெறும் வழியேதடி ?
கயலாடும் ஜாடியாய்க் கனவேந்தும் மூடியாய்க்
காலங்கள் போக்குகின்றேன்
கனியான நெஞ்சோடு கல்லடிகள் பட்டதால்
காயத்தில் வாடுகின்றேன் !
பயமென்ன உன்னிடம் பகர்தற்கு, நானென்றன்
பாதியை இழந்தேனடி
பக்குவம் கண்டிடும் வழிதேடி வழிதேடிப்
பாதையை இழந்தேனடி !
உள்சொல்லும் அர்த்தத்தை உணர்வோடு சொல்கையில்
உயர்வெனக் கருதுவாயோ ?
ஊமையென் நெஞ்சுக்குள் மூழ்கின்ற போர்களை
உன்னதக் கவியெனன்பாயோ ?
கள்கூட வெள்ளையே கவலையில் கதறிடும்
கவிகூட அழகாகுமோ ?
கண்ணீரைச் சொல்லாக மொழிபெயர்க்கும் கவிஞன்
கதறல்கள் இசையாகுமோ ?
முள்ளொன்று நெஞ்சத்தை நோகப்பதம் பார்த்து
முழுவலியைக் காட்டும்நேரம்
மூச்சோடு கண்ணீரை நானும் அடக்கியே
முடியாமல் வாழுகின்றேன் !
சுள்ளென்ற கொடுவெய்யில் சுட்டதைப் போலவே
சுற்றிலும் தேடுகின்றேன்
சோகத்தைப் போக்கவும் கேட்கவும் நானொரு
சுகநிழல் தேடுகின்றேன் !!
உயர்வெனக் கருதுவாயோ ?
ஊமையென் நெஞ்சுக்குள் மூழ்கின்ற போர்களை
உன்னதக் கவியெனன்பாயோ ?
கள்கூட வெள்ளையே கவலையில் கதறிடும்
கவிகூட அழகாகுமோ ?
கண்ணீரைச் சொல்லாக மொழிபெயர்க்கும் கவிஞன்
கதறல்கள் இசையாகுமோ ?
முள்ளொன்று நெஞ்சத்தை நோகப்பதம் பார்த்து
முழுவலியைக் காட்டும்நேரம்
மூச்சோடு கண்ணீரை நானும் அடக்கியே
முடியாமல் வாழுகின்றேன் !
சுள்ளென்ற கொடுவெய்யில் சுட்டதைப் போலவே
சுற்றிலும் தேடுகின்றேன்
சோகத்தைப் போக்கவும் கேட்கவும் நானொரு
சுகநிழல் தேடுகின்றேன் !!
-விவேக்பாரதி
31.07.2017
31.07.2017
Comments
Post a Comment