பாட்டென்று
பாட்டென்று நினைத்தே பட்டென்று உவந்தேன்
பாடலில்லை ஒற்றைச் சேதியில்லை !
கூட்டமுத மென்றே குதித்தோடி வந்தேன்
குழையவில்லை நெஞ்சம் நிறையவில்லை !
எதைவிட்டு வந்தே எதைத்தொட்டுச் செல்ல
எழில்வீணைதான் மண்ணில் இசைபாடுதோ ?
இதைக்கேட்டு நெஞ்சம் இங்கே துடிக்க
இசைராணியின் வாயில் நகையாடுதோ ?
கவியொன்று வந்து கனியாமல் போனால்
கனலாவதை நானும் எவண்சொல்வதோ ?
நவமாக சிந்தை ஒளியேறி சற்றே
நகராமலே நிற்ப தெவண்சொல்வதோ ?
சொற்கட்டுகள் என்னும் புற்கட்டுகள் வந்து
சோதனையு மாவ தழிந்தோடுக !
விற்கட்டிலே பாயும் விசையம்புகள் வந்து
விந்தையென் றேஎன் உளம்சேருக !!
-விவேக்பாரதி
05.07.2017
பாடலில்லை ஒற்றைச் சேதியில்லை !
கூட்டமுத மென்றே குதித்தோடி வந்தேன்
குழையவில்லை நெஞ்சம் நிறையவில்லை !
எதைவிட்டு வந்தே எதைத்தொட்டுச் செல்ல
எழில்வீணைதான் மண்ணில் இசைபாடுதோ ?
இதைக்கேட்டு நெஞ்சம் இங்கே துடிக்க
இசைராணியின் வாயில் நகையாடுதோ ?
கவியொன்று வந்து கனியாமல் போனால்
கனலாவதை நானும் எவண்சொல்வதோ ?
நவமாக சிந்தை ஒளியேறி சற்றே
நகராமலே நிற்ப தெவண்சொல்வதோ ?
சொற்கட்டுகள் என்னும் புற்கட்டுகள் வந்து
சோதனையு மாவ தழிந்தோடுக !
விற்கட்டிலே பாயும் விசையம்புகள் வந்து
விந்தையென் றேஎன் உளம்சேருக !!
-விவேக்பாரதி
05.07.2017