என் இடம்
எனக்கும் இடமுண்டு - தமிழ்
எழுப்பும் கவிஞர் மனமே டையிலே
எழுப்பும் கவிஞர் மனமே டையிலே
மனத்தில் கவிதை மணம்வீசும் - இம்
மழலை மொழியில் இறைபேசும் - வரும்
தினத்தில் எந்தப் பொழுதினிலும் - கவித்
தீபம் ஜொலிக்கும் என்தேசம் !
அறிவில் தோன்றிய கலையாகும் - இது
அருளில் ஏற்றிய உலையாகும் - உயர்
நெறியில் லாதோர் காட்டாறு - என்
நெஞ்சில் ஓடி விளையாடும் !
பாலன் சொல்லில் பலமுண்டு - சம்
பந்தன் பாரதி காட்டுண்டு - இது
காலம் எழுதிய தீர்ப்பாகும் - இக்
காயம் அதிலே சேர்ப்பாகும் !
-விவேக்பாரதி
22.07.2017
மழலை மொழியில் இறைபேசும் - வரும்
தினத்தில் எந்தப் பொழுதினிலும் - கவித்
தீபம் ஜொலிக்கும் என்தேசம் !
அறிவில் தோன்றிய கலையாகும் - இது
அருளில் ஏற்றிய உலையாகும் - உயர்
நெறியில் லாதோர் காட்டாறு - என்
நெஞ்சில் ஓடி விளையாடும் !
பாலன் சொல்லில் பலமுண்டு - சம்
பந்தன் பாரதி காட்டுண்டு - இது
காலம் எழுதிய தீர்ப்பாகும் - இக்
காயம் அதிலே சேர்ப்பாகும் !
-விவேக்பாரதி
22.07.2017