தமிழ்த்தொழுகை
தொழுதால்நான் தமிழ்த்தாயைத் தொழவேண்டும்! - புதுத்
தோரணமாய் அவள்புகழை நடவேண்டும் - இனி
அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் - அந்த
ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? - வந்து
முழுதாக எனைவார்த்த செந்தமிழே - நாவை
முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே - உன்னை
மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் - எந்த
முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!
பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் - அந்தப்
பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் - ஒரு
காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் - ஆ
ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் - உனைச்
சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் - உமை
சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் - மீதி
நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் - இது
நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?
தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை - எனைத்
தொடாமலே தந்தபுதுச் சித்திரமே - விழி
பட்டாலே பாடுகின்ற பாவலனாய் - உயர்
பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே - இனி
கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் - நான்
கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் - நீ
சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் - உன்
சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!
-விவேக்பாரதி
27.01.2019
அழுதாலும் தமிழில்தான் அழவேண்டும் - அந்த
ஆனந்தம் போல்மண்ணில் எதுவேண்டும்? - வந்து
முழுதாக எனைவார்த்த செந்தமிழே - நாவை
முத்துரத மாக்கிவைத்த முத்தமிழே - உன்னை
மொழியாகக் கொண்டதலால் இச்சிறுவன் - எந்த
முக்தியையும் பெற்றதில்லை வான்தமிழே!
பாரதியின் பாட்டுவழி உள்வந்தாய் - அந்தப்
பாட்டமுதம் வழியென்னுள் கள்தந்தாய் - ஒரு
காரணமில் லாமலுயர் பொன்தந்தாய் - ஆ
ககனத்தைக் கைசேர்க்கும் கவிதந்தாய் - உனைச்
சாரதியாய் நான்கொண்ட தேதிமுதல் - உமை
சன்னிதிக்கு மட்டுந்தான் கால்பயணம் - மீதி
நேரமெல்லாம் நீயோட்டும் வெள்ளிரதம் - இது
நேர்ந்துவிட நான்செய்த தென்னதவம்?
தொட்டாலே பொன்னாக்கும் வித்தையினை - எனைத்
தொடாமலே தந்தபுதுச் சித்திரமே - விழி
பட்டாலே பாடுகின்ற பாவலனாய் - உயர்
பாதைமாற்றி விட்டதொரு பெட்டகமே - இனி
கெட்டாலும் கவலையிலை நீகாப்பாய் - நான்
கேட்டதெலாம் உமைகொடுக்கக் கவிசேர்ப்பாய் - நீ
சுட்டாலும் சுகம்சேர்க்கும் காலைவெயில் - உன்
சுருதிக்கு நானாடும் காட்டுமயில்!!
-விவேக்பாரதி
27.01.2019
Comments
Post a Comment