வாய் திறவாமல் பேசியது
காற்றில் லாத வெளித்தடத்தில் - என்
கானத் தாலே பயனென்ன?
நேற்றி ல்லாத நினைவலைகள் - இன்று
நெருக்கு கின்ற நிலையென்ன?
காகித மில்லா ஊருக்குள் - ஒரு
கவிஞன் வாழ்ந்தேன் கற்பனையில்!
தாகம் தாகம் தாகமென - நான்
தத்தித் துடித்தேன் நடுவிரவில்
கறைபடி யாத பேனாவில் - நான்
கால மையை நிறைத்தபடி
மறைந்து மறைந்து வாழ்ந்திருந்தேன் - என்
மனத்தை மாற்றி நடித்திருந்தேன்!
கவிதை அறியாப் பூமிக்குள் - இக்
கவிஞன் வந்த தோர்பிழையா?
செவியில் லாத மனிதருக்குக் - கவி
செப்ப நினைத்தல் தாம்சரியா?
சொற்கள் இருந்தும் ஊமையனாய் - உள்
சுடரை வளர்த்தும் இருள்மகனாய்க்
கற்கள் நிறைந்த நிலப்பரப்பில் - நான்
கஞ்சிக் கொருநெல் விதைக்கின்றேன்!
இதயத் துடிப்பின் ஓசைகளை - விழி
இறக்கி வைக்கும் நீர்த்துளியின்
உதவி யுடனே மொழிபெயர்க்கும் - என்
உணர்ச்சிக் கென்ன தான்பதிலோ?
வாசித் திருந்த வீணையொன்றை - இருள்
வசத்தில் பூட்டி வைப்பதுவோ?
பேசிக் கிடந்த குழந்தையொன்றை - இனி
பேசா தேயென அதட்டுவதோ?
படைத்துக் காக்கும் பணிமறந்து - எனைப்
பாருக் குள்ளிறை விட்டிடுமோ?
உடைத்துப் பொறுக்கிய துண்டுகளாய் - என்
உள்ளம் கண்ணில் பட்டிடுமோ?
உள்ளே மோதும் உணர்வலைகள் - சிறு
ஊமை போலே என்வேடம்
கள்ளில் இல்லாப் போதையினை - என்
கவிதை தருதல் தான்பாவம்!
யானே எனக்குள் பேசுகிறேன் - தனி
யாழை மெதுவாய் மீட்டுகிறேன்!
வானே என்னைக் கேட்கிறது! - இதுநான்
வாய்திற வாமல் பேசியது!!
கானத் தாலே பயனென்ன?
நேற்றி ல்லாத நினைவலைகள் - இன்று
நெருக்கு கின்ற நிலையென்ன?
காகித மில்லா ஊருக்குள் - ஒரு
கவிஞன் வாழ்ந்தேன் கற்பனையில்!
தாகம் தாகம் தாகமென - நான்
தத்தித் துடித்தேன் நடுவிரவில்
கறைபடி யாத பேனாவில் - நான்
கால மையை நிறைத்தபடி
மறைந்து மறைந்து வாழ்ந்திருந்தேன் - என்
மனத்தை மாற்றி நடித்திருந்தேன்!
கவிதை அறியாப் பூமிக்குள் - இக்
கவிஞன் வந்த தோர்பிழையா?
செவியில் லாத மனிதருக்குக் - கவி
செப்ப நினைத்தல் தாம்சரியா?
சொற்கள் இருந்தும் ஊமையனாய் - உள்
சுடரை வளர்த்தும் இருள்மகனாய்க்
கற்கள் நிறைந்த நிலப்பரப்பில் - நான்
கஞ்சிக் கொருநெல் விதைக்கின்றேன்!
இதயத் துடிப்பின் ஓசைகளை - விழி
இறக்கி வைக்கும் நீர்த்துளியின்
உதவி யுடனே மொழிபெயர்க்கும் - என்
உணர்ச்சிக் கென்ன தான்பதிலோ?
வாசித் திருந்த வீணையொன்றை - இருள்
வசத்தில் பூட்டி வைப்பதுவோ?
பேசிக் கிடந்த குழந்தையொன்றை - இனி
பேசா தேயென அதட்டுவதோ?
படைத்துக் காக்கும் பணிமறந்து - எனைப்
பாருக் குள்ளிறை விட்டிடுமோ?
உடைத்துப் பொறுக்கிய துண்டுகளாய் - என்
உள்ளம் கண்ணில் பட்டிடுமோ?
உள்ளே மோதும் உணர்வலைகள் - சிறு
ஊமை போலே என்வேடம்
கள்ளில் இல்லாப் போதையினை - என்
கவிதை தருதல் தான்பாவம்!
யானே எனக்குள் பேசுகிறேன் - தனி
யாழை மெதுவாய் மீட்டுகிறேன்!
வானே என்னைக் கேட்கிறது! - இதுநான்
வாய்திற வாமல் பேசியது!!
-விவேக்பாரதி
04.02.2019
04.02.2019
Comments
Post a Comment