#விடிகாலைஞானங்கள்
காக்கைகளின் கூட்டத்தில் சிக்குண்ட அணில்குஞ்சு காக்க வென்று
வாழ்க்கைக்குப் போராடி தத்தளிக்க நான்கண்டேன் வையம் போகும்
போக்குக்கு நிகரென்று பெருமூச்சு விடச்,சேர்ந்தே பொழுது பூக்க
நோக்குற்றேன் ஓடுகிறேன் அணில்நானா காக்காயா நவில்வ தாரோ??
-விவேக்பாரதி
12.05.2021
அணிலுக்கு விரைவும் காக்கைக்குச் சிறகும் தந்தவனைக் கேட்டாலவன்
ReplyDeleteதவறாது நவின்றிடுவான்.
வவேசு
அவனைக் கேட்பது எப்படி எப்போது என்று தெரியாமல்தானே காக்கையும் அணிலுமாய் மாறி மாறி ஓடுகிறோம் ஐயா.
Delete