காளித் தேர்
"ஞானச்சக்கரம்" என்றொரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நேற்று கண்டு களித்தேன். அதில் கலைமகன் (Kalaimagan T) அவர்கள் பாடிய "யாதுமாகி நின்றாய் காளி" எனக்குள் இந்தக் காட்சியைக் காட்டியது...
காளிமகா ராணியவள் தேர்வருகிறது! - அதில்
கலைகளெனும் பாட்டுக்கூத்துச் சீர்வருகிறது!
தோளில்மலர் மாலைகொண்ட பார்வருகிறது - இந்தத்
தோற்றத்துடன் என்னுயிரும் ஊர்வருகிறது!
சிங்கம்நூறு பூட்டியந்தத் தேர்வருகிறது - ஒரு
தீச்சுடர்போல் வண்ணத்திலே தேர்வருகிறது!
எங்குமுற்ற மேகம்போலத் தேர்வருகிறது - அட
எங்கள்காளி வீற்றிருக்கும் தேர்வருகிறது!
முன்னடுக்கில் தோன்றுகின்ற வில்லுப்பாட்டுகள் - அதில்
முழங்குகின்ற பாடலெலாம் அன்னைபாட்டுகள்!
பின்னிருந்த ஆசனத்தில் அவளலங்காரம் - உலகப்
பிறப்புகளும் இறப்புகளும் அவளதிகாரம்!
யாதுமாகி நின்றவளைப் பாடிப்பாடியே - அவள்
யவ்வணத்தை அன்புளத்தைப் போற்றியாடியே,
காதம்கோடி தாண்டியந்தத் தேர்வருகிறது - பெருங்
ககனவெளியில் தீப்பறக்கத் தேர்வருகிறது!
ஞானச்சக்க ரத்தினோசை சுருதியாகிட - இந்த
ஞாலமிசை பக்திநெறி வழிகளாகிட
வானவில்லின் வண்ணயிழை சாலையாகிட - சுடர்
வண்ணத்திலே நானியக்கும் தேர்வருகிறது!
அன்னைவரும் தேருக்கிந்தச் சிறுவன்சாரதி - உடன்
அங்கமர்ந்து வருபவர்கள் லக்ஷ்மி,பாரதி!
மின்னலெனும் தேருண்டு தான்வருகிறது! - அதில்
மின்னுகின்ற ஆதிசக்தி வான்வருகிறது!!
-விவேக்பாரதி
20.02.2018
காளிமகா ராணியவள் தேர்வருகிறது! - அதில்
கலைகளெனும் பாட்டுக்கூத்துச் சீர்வருகிறது!
தோளில்மலர் மாலைகொண்ட பார்வருகிறது - இந்தத்
தோற்றத்துடன் என்னுயிரும் ஊர்வருகிறது!
சிங்கம்நூறு பூட்டியந்தத் தேர்வருகிறது - ஒரு
தீச்சுடர்போல் வண்ணத்திலே தேர்வருகிறது!
எங்குமுற்ற மேகம்போலத் தேர்வருகிறது - அட
எங்கள்காளி வீற்றிருக்கும் தேர்வருகிறது!
முன்னடுக்கில் தோன்றுகின்ற வில்லுப்பாட்டுகள் - அதில்
முழங்குகின்ற பாடலெலாம் அன்னைபாட்டுகள்!
பின்னிருந்த ஆசனத்தில் அவளலங்காரம் - உலகப்
பிறப்புகளும் இறப்புகளும் அவளதிகாரம்!
யாதுமாகி நின்றவளைப் பாடிப்பாடியே - அவள்
யவ்வணத்தை அன்புளத்தைப் போற்றியாடியே,
காதம்கோடி தாண்டியந்தத் தேர்வருகிறது - பெருங்
ககனவெளியில் தீப்பறக்கத் தேர்வருகிறது!
ஞானச்சக்க ரத்தினோசை சுருதியாகிட - இந்த
ஞாலமிசை பக்திநெறி வழிகளாகிட
வானவில்லின் வண்ணயிழை சாலையாகிட - சுடர்
வண்ணத்திலே நானியக்கும் தேர்வருகிறது!
அன்னைவரும் தேருக்கிந்தச் சிறுவன்சாரதி - உடன்
அங்கமர்ந்து வருபவர்கள் லக்ஷ்மி,பாரதி!
மின்னலெனும் தேருண்டு தான்வருகிறது! - அதில்
மின்னுகின்ற ஆதிசக்தி வான்வருகிறது!!
-விவேக்பாரதி
20.02.2018
Comments
Post a Comment