மண்செழிக்க வீழ்ந்தவிதை பாரதி
மண்செழிக்க வீழ்ந்தவிதை பாரதி - அது
மரமாய் விரிந்தபுதிர் பாரதி
எண்ணத்தில் வைத்தசுடர் பாரதி - தனை
எரியாய் எரித்தநிழல் பாரதி
கண்ணுக்குள் காந்தமெங்கள் பாரதி - தமிழ்க்
கவிதைக்குப் புதுச்சிறகு பாரதி
தண்ணீரில் பற்றும்தீ பாரதி - தொடத்
தண்ணெனும் மின்சாரம் பாரதி
எண்ணத்தில் வைத்தசுடர் பாரதி - தனை
எரியாய் எரித்தநிழல் பாரதி
கண்ணுக்குள் காந்தமெங்கள் பாரதி - தமிழ்க்
கவிதைக்குப் புதுச்சிறகு பாரதி
தண்ணீரில் பற்றும்தீ பாரதி - தொடத்
தண்ணெனும் மின்சாரம் பாரதி
அரசியலில் அற்புதன்தான் பாரதி - தனி
ஆன்மிகத்துத் தத்துவனும் பாரதி
நிரந்தமாச் சொல்லலழகன் பாரதி - பெரும்
நிச்சலனப் புயற்சீற்றம் பாரதி
சுரமிசைத்த வீணையெங்கள் பாரதி - அதில்
சூடுவைத்து விழிப்புதந்த பாரதி
வரமெனவே வந்ததவம் பாரதி - நம்
வாழ்க்கைக்குப் பாதையந்த பாரதி!
ஆன்மிகத்துத் தத்துவனும் பாரதி
நிரந்தமாச் சொல்லலழகன் பாரதி - பெரும்
நிச்சலனப் புயற்சீற்றம் பாரதி
சுரமிசைத்த வீணையெங்கள் பாரதி - அதில்
சூடுவைத்து விழிப்புதந்த பாரதி
வரமெனவே வந்ததவம் பாரதி - நம்
வாழ்க்கைக்குப் பாதையந்த பாரதி!
ஆதியொளி கண்டவனாம் பாரதி - அதற்கு
ஆணைபல போட்டவனும் பாரதி
போதைதரும் சொற்கலைஞன் பாரதி - தனி
போதநிலை விற்பனனும் பாரதி
நாதவெள்ளம் நிற்குமணை பாரதி - எலாம்
நானெனவே சொல்லுமொழி பாரதி
வேதனையில் புன்சிரிப்பு பாரதி - சோம்பும்
வேளையிலே சாட்டையடி பாரதி
ஆணைபல போட்டவனும் பாரதி
போதைதரும் சொற்கலைஞன் பாரதி - தனி
போதநிலை விற்பனனும் பாரதி
நாதவெள்ளம் நிற்குமணை பாரதி - எலாம்
நானெனவே சொல்லுமொழி பாரதி
வேதனையில் புன்சிரிப்பு பாரதி - சோம்பும்
வேளையிலே சாட்டையடி பாரதி
மனைவிக்குள் சக்தியுரு கண்டவன் - தன்
மார்போடு கழுதையை அணைத்தவன்
கனவுக்குள் தேரோட்டிச் சென்றவன் - அதில்
கண்டவற்றில் ஞானரதம் சொன்னவன்
தினந்தினமும் தேய்ந்தே வளர்ந்தவன் - உள்ள
திக்கணைத்தும் மூலையிலே கண்டவன்
வினைகளினால் காலத்தில் நின்றவன் - ஒளி
வீதிகளில் வந்தே நடந்தவன்!
மார்போடு கழுதையை அணைத்தவன்
கனவுக்குள் தேரோட்டிச் சென்றவன் - அதில்
கண்டவற்றில் ஞானரதம் சொன்னவன்
தினந்தினமும் தேய்ந்தே வளர்ந்தவன் - உள்ள
திக்கணைத்தும் மூலையிலே கண்டவன்
வினைகளினால் காலத்தில் நின்றவன் - ஒளி
வீதிகளில் வந்தே நடந்தவன்!
வேதத்தை எளியதமிழ் செய்தவன் - நாட்டு
வேள்விக்குள் தன்வியர்வை பெய்தவன்
பூதங்கள் தானென்(று) உணர்ந்தவன் - ஒரு
புல்லாங்குழல்போல் உழைத்தவன்
காதலையும் தெய்வீகம் செய்தவன் - இந்த
கலியுகத்தில் கவிதைமழை பெய்தவன்
சேதமற்ற பாரதத்தைக் கேட்டவன் - அதைச்
செய்யுமச்சில் தனையுருக்கிப் போட்டவன்!!
வேள்விக்குள் தன்வியர்வை பெய்தவன்
பூதங்கள் தானென்(று) உணர்ந்தவன் - ஒரு
புல்லாங்குழல்போல் உழைத்தவன்
காதலையும் தெய்வீகம் செய்தவன் - இந்த
கலியுகத்தில் கவிதைமழை பெய்தவன்
சேதமற்ற பாரதத்தைக் கேட்டவன் - அதைச்
செய்யுமச்சில் தனையுருக்கிப் போட்டவன்!!
-விவேக்பாரதி
05-12-2022
05-12-2022
Comments
Post a Comment