தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
காக்கைக் குருவிகளா? - அவரென்ன
காளான் புல்லினமா?
காக்கும் பொறுப்புடையார் - கண்டபடி
காயச் சுடுவதுவோ?
அவரும் உயிரலவோ? - அம்மம்மா
ஆவி துடிக்கிறதே
தவற்றை எவரிழைத்தார்? - யோசிக்குந்
தன்மை மறந்தனரோ?
கொடுங்கோல் ஆட்சியதோ? - முன்னமோர்
கொற்றவன் கோவலனைச்
சடுதியிற் கொன்றவுடன் - தண்டனை
தானும் அடைந்தனனே!
அந்நெறி யோர்கிலமோ? - தமிழரின்
அறிவு பறிபோச்சோ?
மெய்ந்நெறிக் காலவர்கள் - பன்னிய
மேன்மையி லாச்செயலால்,
செத்தது மானுடந்தான் - புழுதியில்
சேர்ந்தது நம்பிக்கைத்தேன்!
பொத்து வரும்புரட்சி - ஐயகோ
போனது நம்வளர்ச்சி!!
-விவேக்பாரதி
22.05.2018
காக்கும் பொறுப்புடையார் - கண்டபடி
காயச் சுடுவதுவோ?
அவரும் உயிரலவோ? - அம்மம்மா
ஆவி துடிக்கிறதே
தவற்றை எவரிழைத்தார்? - யோசிக்குந்
தன்மை மறந்தனரோ?
கொடுங்கோல் ஆட்சியதோ? - முன்னமோர்
கொற்றவன் கோவலனைச்
சடுதியிற் கொன்றவுடன் - தண்டனை
தானும் அடைந்தனனே!
அந்நெறி யோர்கிலமோ? - தமிழரின்
அறிவு பறிபோச்சோ?
மெய்ந்நெறிக் காலவர்கள் - பன்னிய
மேன்மையி லாச்செயலால்,
செத்தது மானுடந்தான் - புழுதியில்
சேர்ந்தது நம்பிக்கைத்தேன்!
பொத்து வரும்புரட்சி - ஐயகோ
போனது நம்வளர்ச்சி!!
-விவேக்பாரதி
22.05.2018
Comments
Post a Comment