களி தந்தாய்
கண்ணை மறைத்திடும் கார்முகில் கூட்டத்தில்
காலம் கழிந்திருந்தேன்! - ஒரு
காலையும் மாலையும் பாலகன் ஆசையைக்
கவ்விப் பிடித்திருந்தேன்,
எண்ண மனைத்திலும் ஏறிய மோகத்தில்
எம்பிக் குதித்திருந்தேன் - வந்த
ஏணியைத் தள்ளி யிகழ்ந்திட நாணின்றி
எப்படியோ திரிந்தேன்!
உண்மைப் பொருளை உணர மறுக்கின்ற
உச்சத்தில் நானிருந்தேன் - சிறு
ஊறுவந் தாலும் தடுக்குற்று பள்ளத்தில்
உச்சிவிட் டேவிழுந்தேன்
வண்ண மறிந்திடா வாழ்வினில் கண்முன்னே
வானவில் கொண்டுதந்தாய் - குருவே
வாடு மனத்தினில் தேடல் பயணங்கள்
வார்த்துக் களியைத்தந்தாய்!
நீயொரு சத்தியம் நீயொரு தத்துவம்
நீயே இறைவடிவம் - உன்
நிழலும் ரகசியம் நீண்டிடும் சிந்தனை
நீளம் பரமசுகம்
தீயொரு கண்ணெனக் கொண்ட தலைவன்
திரட்டிய அன்புமுகம் - ஒரு
திவ்ய சுருதியில் நெஞ்சில் ஒலித்திடும்
தீட்சண்ய தேவசுரம்
வாயொரு தீவினை நெஞ்சொரு தீவினை
மாற்றி மாற்றித்தொடவே - ஒரு
வன்மையி லாத வலிக்கரம் சிக்குற்று
வாட்டத் துழன்றிடவே
தாயொரு பக்கம் தளிரினைக் கவ்வித்
தடங்கொண்டு சேர்ப்பதுபோல் - குருவே
தாவும் மனத்தினில் ஆவல் அறுத்துடன்
தண்மைக் களியைத்தந்தாய்!
என்றனை ஓர்கணம் நான்விட்டு நீங்கி
எடுக்கின்ற பார்வையிலும் - சிறு
ஏழையின் நெஞ்சம் படும்துயர் கண்டதும்
ஏந்திடும் வேர்வையிலும்
குன்றினைப் போலக் குணமற்ற பேதங்கள்
கூட வருவதிலும், - பல
குட்டிக் கரணங்கள் இட்டுத் தினமொரு
குற்றம் இழைக்கையிலும்
நின்றன் அருட்பதம் தேடிப் பலபல
நீசரைக் காண்கையிலும் - பின்னர்
நிம்மதி வேண்டி நிழலில் உறங்கிட
நீவந்து தொட்டதிலும்
ஒன்றினைக் கண்டனன் யாவையும் உன்கரம்
ஓட்டும் திரைகளென்றோ - குருவே
ஒற்றை மலர்க்கரம் பற்ற மனத்தினில்
ஓங்குங் களியைத்தந்தாய்!
வேண்டுவ தின்நிழல் வேண்டுவ துன்குரல்
வேண்டுவ துன்றன்மடி - பல
வேகத்திலும் வரும் சோகத்திலும் பட்டு
வெந்தழி யாதமதி
ஆண்டகை யேயுன தன்பின் இருக்கையில்
ஆசையற் றுய்திடுதல் - என
தாவி முழுதிலும் தேவி திருவுரு
ஆழ்ந்து பதிந்திடுதல்
மாண்டு துடிக்க மரணமே சூழினும்
மாறிடா வுன்நினைப்பு - என்
மனதுத் தடத்தினில் உனது பதமலர்
மன்னும் திருச்சிரிப்பு
காண்டிப னுக்குக் கிடைத்ததைப் போலுன்றன்
காந்த முழுவுருவை - குருவே
காட்டித் துயர்களை ஓட்டிக் கவிதையில்
காலக் களியைத்தந்தாய்!!
விவேக்பாரதி
10.06.2018
காலம் கழிந்திருந்தேன்! - ஒரு
காலையும் மாலையும் பாலகன் ஆசையைக்
கவ்விப் பிடித்திருந்தேன்,
எண்ண மனைத்திலும் ஏறிய மோகத்தில்
எம்பிக் குதித்திருந்தேன் - வந்த
ஏணியைத் தள்ளி யிகழ்ந்திட நாணின்றி
எப்படியோ திரிந்தேன்!
உண்மைப் பொருளை உணர மறுக்கின்ற
உச்சத்தில் நானிருந்தேன் - சிறு
ஊறுவந் தாலும் தடுக்குற்று பள்ளத்தில்
உச்சிவிட் டேவிழுந்தேன்
வண்ண மறிந்திடா வாழ்வினில் கண்முன்னே
வானவில் கொண்டுதந்தாய் - குருவே
வாடு மனத்தினில் தேடல் பயணங்கள்
வார்த்துக் களியைத்தந்தாய்!
நீயொரு சத்தியம் நீயொரு தத்துவம்
நீயே இறைவடிவம் - உன்
நிழலும் ரகசியம் நீண்டிடும் சிந்தனை
நீளம் பரமசுகம்
தீயொரு கண்ணெனக் கொண்ட தலைவன்
திரட்டிய அன்புமுகம் - ஒரு
திவ்ய சுருதியில் நெஞ்சில் ஒலித்திடும்
தீட்சண்ய தேவசுரம்
வாயொரு தீவினை நெஞ்சொரு தீவினை
மாற்றி மாற்றித்தொடவே - ஒரு
வன்மையி லாத வலிக்கரம் சிக்குற்று
வாட்டத் துழன்றிடவே
தாயொரு பக்கம் தளிரினைக் கவ்வித்
தடங்கொண்டு சேர்ப்பதுபோல் - குருவே
தாவும் மனத்தினில் ஆவல் அறுத்துடன்
தண்மைக் களியைத்தந்தாய்!
என்றனை ஓர்கணம் நான்விட்டு நீங்கி
எடுக்கின்ற பார்வையிலும் - சிறு
ஏழையின் நெஞ்சம் படும்துயர் கண்டதும்
ஏந்திடும் வேர்வையிலும்
குன்றினைப் போலக் குணமற்ற பேதங்கள்
கூட வருவதிலும், - பல
குட்டிக் கரணங்கள் இட்டுத் தினமொரு
குற்றம் இழைக்கையிலும்
நின்றன் அருட்பதம் தேடிப் பலபல
நீசரைக் காண்கையிலும் - பின்னர்
நிம்மதி வேண்டி நிழலில் உறங்கிட
நீவந்து தொட்டதிலும்
ஒன்றினைக் கண்டனன் யாவையும் உன்கரம்
ஓட்டும் திரைகளென்றோ - குருவே
ஒற்றை மலர்க்கரம் பற்ற மனத்தினில்
ஓங்குங் களியைத்தந்தாய்!
வேண்டுவ தின்நிழல் வேண்டுவ துன்குரல்
வேண்டுவ துன்றன்மடி - பல
வேகத்திலும் வரும் சோகத்திலும் பட்டு
வெந்தழி யாதமதி
ஆண்டகை யேயுன தன்பின் இருக்கையில்
ஆசையற் றுய்திடுதல் - என
தாவி முழுதிலும் தேவி திருவுரு
ஆழ்ந்து பதிந்திடுதல்
மாண்டு துடிக்க மரணமே சூழினும்
மாறிடா வுன்நினைப்பு - என்
மனதுத் தடத்தினில் உனது பதமலர்
மன்னும் திருச்சிரிப்பு
காண்டிப னுக்குக் கிடைத்ததைப் போலுன்றன்
காந்த முழுவுருவை - குருவே
காட்டித் துயர்களை ஓட்டிக் கவிதையில்
காலக் களியைத்தந்தாய்!!
விவேக்பாரதி
10.06.2018
Comments
Post a Comment