ஜனனி
ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ
இதயக் கூட்டைப் பிளந்து - அதிலே
இமய மாகி வளர்ந்து
உதய மாகக் கிளர்ந்து - உடலுள்
உயிரு மாகி அமர்ந்து
எதையும் செய்யும் கலைநீ - நெஞ்சை
ஏவு கின்ற சிலைநீ
குதலை மொழியின் ஜனனி - மனதுக்
குன்றில் மலரும் மலர்நீ!
ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ
திவலை யாகக் கசிந்து - அதனால்
தினமு மாகி வழிந்து
கவிதை யாக மலர்ந்து - அதிலே
ககனம் கடல்கள் அளந்து
குவியும் கருத்துக் கொருத்தி - அழிக்கும்
குணமி லாத வொருத்தீ
சிவமும் ஆன வெளிநீ - அதற்குள்
ஜீவ னான ஜனனி!
ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ
அறிவுக் கலனில் உதவி
கனவுத் தோட்டத் துள்ளே - அழகுக்
காவ லாகப் பரவி
எனையி ழுத்துக் கரைத்து - கருதும்
எண்ண மாக நிறைத்து
நினைவில் நிற்கும் சுடர்நீ - அருளே
நீழ லான ஜனனி!!
ஜனனி ஜனனி ஜனனி - என்றன்
ஜீவ னுக்குள் ஒளிநீ
-விவேக்பாரதி
07.06.2018
Comments
Post a Comment