ஆடிக் குதிக்கும் காதல்
மகாகவி பாரதியாரின் "கன்னத்தினில் குயில் சத்தமே" என்ற காவடிச்சிந்தின் மெட்டு...
வண்ணக் கவிதையின் சந்தமே - என்றன்
வாழ்வினுக் கேயுற்ற சொந்தமே - அந்த
வானம் கொடுத்திட்ட பந்தமே - மலர்
வனமேயுன தழகேயிசை
வளமேதனி யிதமேயென
வார்த்தைகள் சொல்ல வசந்தமே - என்றன்
வாயினில் தேன்வந்து சிந்துமே!
எண்ணத் தினித்திடும் நங்கையே! - மலர்
ஏந்தும் நகமுன்றன் செங்கையே! - எனை
என்றும் விரும்பிடும் மங்கையே - தடை
எதுவாகிலு முனதாசைக
ளுடனேநிறை வெனவாகிட
ஏற்றி இயற்றிடும் எங்கையே! - நான்
எப்போதும் உன்றன் சதங்கையே!
பாருக் கதிசயம் சொல்லுவேன் - உனைப்
பார்த்த விடத்திலே புல்லுவேன் - புகழ்
பாடிப் பாடிக்காலம் தள்ளுவேன்! - வரும்
பகலாகினு மிரவாகினும்
படர்மாலையின் பொழுதாகினும்
பாவை வனப்பினில் துள்ளுவேன் - உன்றன்
பாதைத் துணையெனச் செல்லுவேன்!
நேருக்கு நேர்நின்று கொஞ்சுவேன் - இடை
நெளிவில் இருந்திடக் கெஞ்சுவேன் - உன்றன்
நெற்றி சுருங்கிடில் அஞ்சுவேன்! - உண்மை
நெறிதானடி யுரைதானடி
நினதோரெழில் மறவேனடி
நெஞ்சிலுனை வைத்துத் துஞ்சுவேன் - அந்த
நேரத்தில் தான்கொஞ்சம் மிஞ்சுவேன்!
ஜோடிக் கதிரவன் கண்களோ? - முக
ஜோதி ஒளிர்விடும் திங்களோ? - இனம்
சொர்க்கம் வசிக்கின்ற பெண்களோ? - இதழ்
சொலுமோசையில் வரும்பாஷைகள்
அமுதாகிடு கவியோவெனச்
சோதிக்கத் தீர்பவை எண்களோ? - புதுச்
சோலைகள் நின் மருமங்களோ?
ஆடிக் குதித்திடும் பெண்மையே - அழ
காளப் பிறந்திட்ட பொம்மையே - என்
ஆவி உனைத்தொடும் அண்மையே - தொழும்
அடியாரென விழுவேனுன
ததிகாரமு மறிவேனெனை
அண்டி நெருங்கிடும் தன்மையே - தனில்
ஆசை உயர்த்துவன் உண்மையே!!
-விவேக்பாரதி
26.11.2017
வண்ணக் கவிதையின் சந்தமே - என்றன்
வாழ்வினுக் கேயுற்ற சொந்தமே - அந்த
வானம் கொடுத்திட்ட பந்தமே - மலர்
வனமேயுன தழகேயிசை
வளமேதனி யிதமேயென
வார்த்தைகள் சொல்ல வசந்தமே - என்றன்
வாயினில் தேன்வந்து சிந்துமே!
எண்ணத் தினித்திடும் நங்கையே! - மலர்
ஏந்தும் நகமுன்றன் செங்கையே! - எனை
என்றும் விரும்பிடும் மங்கையே - தடை
எதுவாகிலு முனதாசைக
ளுடனேநிறை வெனவாகிட
ஏற்றி இயற்றிடும் எங்கையே! - நான்
எப்போதும் உன்றன் சதங்கையே!
பாருக் கதிசயம் சொல்லுவேன் - உனைப்
பார்த்த விடத்திலே புல்லுவேன் - புகழ்
பாடிப் பாடிக்காலம் தள்ளுவேன்! - வரும்
பகலாகினு மிரவாகினும்
படர்மாலையின் பொழுதாகினும்
பாவை வனப்பினில் துள்ளுவேன் - உன்றன்
பாதைத் துணையெனச் செல்லுவேன்!
நேருக்கு நேர்நின்று கொஞ்சுவேன் - இடை
நெளிவில் இருந்திடக் கெஞ்சுவேன் - உன்றன்
நெற்றி சுருங்கிடில் அஞ்சுவேன்! - உண்மை
நெறிதானடி யுரைதானடி
நினதோரெழில் மறவேனடி
நெஞ்சிலுனை வைத்துத் துஞ்சுவேன் - அந்த
நேரத்தில் தான்கொஞ்சம் மிஞ்சுவேன்!
ஜோடிக் கதிரவன் கண்களோ? - முக
ஜோதி ஒளிர்விடும் திங்களோ? - இனம்
சொர்க்கம் வசிக்கின்ற பெண்களோ? - இதழ்
சொலுமோசையில் வரும்பாஷைகள்
அமுதாகிடு கவியோவெனச்
சோதிக்கத் தீர்பவை எண்களோ? - புதுச்
சோலைகள் நின் மருமங்களோ?
ஆடிக் குதித்திடும் பெண்மையே - அழ
காளப் பிறந்திட்ட பொம்மையே - என்
ஆவி உனைத்தொடும் அண்மையே - தொழும்
அடியாரென விழுவேனுன
ததிகாரமு மறிவேனெனை
அண்டி நெருங்கிடும் தன்மையே - தனில்
ஆசை உயர்த்துவன் உண்மையே!!
-விவேக்பாரதி
26.11.2017
Comments
Post a Comment